கார்மீது மரம் விழுந்து வங்கி மேலாளா் பலி

கார்மீது மரம் விழுந்து வங்கி மேலாளா் பலி

1 mins read
2da7a5a5-ae82-4a63-a205-fef96d5bc960
உயிரிழந்த வங்கி மேலா­ளர் வாணி கபி­லன். -
multi-img1 of 2

சென்னை: சென்னை கே.கே. நக­ரில் சாலை­யில் சென்­று­கொண்­டி­ருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்­த­தில் வங்கி மேலா­ளர் பலி­யா­னார். இந்த விபத்­தில் இருவா் காய­ம­டைந்­தனா்.

சென்னை போரூர், மங்­க­லம் நக­ரைச் சேர்ந்­த­வர் வாணி கபி­லன், 57. இவர், கே.கே. நகர் லட்­சு­ம­ண­சாமி சாலை­யில் அமைந்­துள்ள இந்­தி­யன் ஓவர்­சிஸ் வங்­கி­யில் மேலா­ள­ரா­கப் பணி­யாற்றி வந்­தார்.

அத்­து­டன், இவர் ஒரு தமிழ் எழுத்­தா­ள­ரும்­கூட. பல்­வேறு கவி­தைத் தொகுப்பு புத்­த­கங்­க­ளை­யும் இவர் எழு­தி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், வெள்­ளி­யன்று மாலை பணி முடிந்­த­வு­டன் தனது காரின் பின்­பு­றத்­தில் அமர்ந்து தங்கை எழி­ல­ர­சி­யு­டன் தனது வீட்­டிற்­குப் பய­ணம் செய்து கொண்­டி­ருந்­தார்.

அவர்­க­ளது கார் கர்­நா­டக வங்கி அருகே வந்­த­போது திடீ­ரென அங்­கி­ருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து காரின் பின்­பக்­கத்­தில் விழுந்­தது.

இதில் பின்­பக்­கத்­தில் அமர்ந்­தி­ருந்த வாணி கபி­லன் உயி­ரி­ழந்­தார்.

அவ­ரது தங்கை எழி­ல­ர­சி­யும் கார் ஓட்­டு­நர் கார்த்­திக்­கும் காயத்­து­டன் தப்­பி­னர். அவர்­கள் கேகே நகர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

முதற்­கட்ட விசா­ர­ணை­யில் கடந்த இரண்டு நாள்­க­ளாக பெய்த கன­மழை கார­ண­மா­க­வும் மண்­ணின் ஈரத்­தன்மை கார­ண­மா­க­வும் மரம் விழுந்­துள்­ளது தெரி­ய­வந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பாக விரி­வாக விசா­ரணை மேற்­கொள்ள உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தாக சென்னை மாந­க­ராட்சி கூறி­யுள்­ளது.