சென்னை: தமிழக சாலையோர வியாபாரிகள் பத்துப் பேரில் ஒருவர் (10%), ஒருமுறை சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்
படுத்துவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
இந்திய அளவில் சுகாதாரமான உணவை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக இம்மாதத் தொடக்கத்தில் மத்திய சுகாதார அமைச்சு அறிவித்தது.
இந்நிலையில், உணவு தயாரித்து விற்கும் சாலையோர வியாபாரிகளிடம் 'சிஏஜி' என்னும் தொண்டூழியக் குழு கருத்தாய்வு நடத்தியது.
13 மாவட்டங்களைச் சேர்ந்த 2,333 வியாபாரிகளிடம் நான்கு மாதங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
95 விழுக்காட்டினர் சமையலுக்குத் தேவைப்படும் எண்ணெய்யை மொத்தவிலை மற்றும் சில்லறை விலைக் கடைகளில் வாங்குவதாகக் கூறினர். நான்கு விழுக்காட்டினர் மட்டும் ஹோட்டல்கள், உணவகங்கள், பெரிய நொறுக்குத் தீனி கடைகள் போன்றவற்றிடம் இருந்து பயன்
படுத்திய எண்ணெய்யை வாங்குவதாகத் தெரிவித்தனர்.
விலை சிக்கனம் கருதி மூன்றில் ஒருவர் பாமாயிலை வாங்கு வதாகக் கூறினர். பயன்படுத்திய எண்ணெய் இதைவிட விலை குறைவு என்பதால் அதனையும் சிலர் நாடுவதாக ஆய்வை நடத்தியவர்களில் ஒருவரான கீர்த்தனா தங்கவேலு கூறினார்.