சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தும் 10% வியாபாரிகள்

சமைத்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தும் 10% வியாபாரிகள்

1 mins read
3f5062e0-3140-406e-a2fe-bc278b5018b1
-

சென்னை: தமிழக சாலை­யோர வியா­பா­ரி­கள் பத்­துப் பேரில் ஒரு­வர் (10%), ஒரு­முறை சமைத்த எண்­ணெய்யை மீண்­டும் பயன்­

ப­டுத்­து­வ­தாக ஆய்வு ஒன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­திய அள­வில் சுகா­தா­ர­மான உணவை வழங்­கும் மாநி­லங்­க­ளின் பட்­டி­ய­லில் தமிழ்­நாடு முத­லி­டத்­தில் இருப்­ப­தாக இம்­மா­தத் தொடக்­கத்­தில் மத்­திய சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

இந்­நி­லை­யில், உணவு தயா­ரித்து விற்­கும் சாலை­யோர வியா­பா­ரி­க­ளி­டம் 'சிஏஜி' என்­னும் தொண்­டூ­ழி­யக் குழு கருத்­தாய்வு நடத்­தி­யது.

13 மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த 2,333 வியா­பா­ரி­க­ளி­டம் நான்கு மாதங்­கள் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

95 விழுக்­காட்­டி­னர் சமை­ய­லுக்­குத் தேவைப்­படும் எண்­ணெய்யை மொத்­த­விலை மற்­றும் சில்­லறை விலைக் கடை­களில் வாங்­கு­வ­தா­கக் கூறி­னர். நான்கு விழுக்­காட்­டி­னர் மட்­டும் ஹோட்­டல்­கள், உண­வ­கங்­கள், பெரிய நொறுக்­குத் தீனி கடை­கள் போன்­ற­வற்­றி­டம் இருந்து பயன்­

ப­டுத்­திய எண்­ணெய்யை வாங்­கு­வ­தா­கத் தெரி­வித்­த­னர்.

விலை சிக்­க­னம் கருதி மூன்­றில் ஒரு­வர் பாமா­யிலை வாங்­கு­ வ­தா­கக் கூறி­னர். பயன்­ப­டுத்­திய எண்­ணெய் இதை­விட விலை குறைவு என்­ப­தால் அத­னை­யும் சிலர் நாடு­வ­தாக ஆய்வை நடத்­தி­ய­வர்­களில் ஒரு­வ­ரான கீர்த்­தனா தங்­க­வேலு கூறி­னார்.