பெங்களூரு: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக்குவிப்பு வழக்குத் தொடரப்பட்டபோது 1996 டிசம்பர் 11ஆம் தேதி அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
சோதனையின்போது 11,344 சேலைகள், 1040 வீடியோ கேசட்டுகள், 750 ஜோடி காலணிகள், 250 சால்வைகள், 91 கைக்கடி
காரங்கள், 24 டேப்ரிக்கார்டர்கள், 2 ஆடியோ டிஸ்க், 4 சி.டி. பிளேயர், 1 வீடியோ கேமரா, 8 வீடியோ காசட் ரெக்கார்டர்கள், 10 தொலைக் காட்சிப் பெட்டிகள், 12 குளிர்
சாதனப் பெட்டிகள், 3 இரும்புப் பெட்டகங்கள், 44 குளிரூட்டிகள், 33 தொலைபேசி மற்றும் இண்டர்காம் போன்றவை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை கர்நாடக அரசு பெங்களூருவில் உள்ள அரசு கருவூலத்தில் வைத்து பாதுகாத்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலருமான டி. நரசிம்ம மூர்த்தி என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
"ஜெயலலிதா பயன்படுத்திய பொருள்கள் 26 ஆண்டுகளாக கருவூலத்தில் இருப்பதால் அது வீணாக வாய்ப்பு உள்ளது. அவற்றைப் பயன்படுத்தமுடியாத அளவுக்கு சேதமாகும் சூழல் உள்ளது.
"எனவே சட்டத்திற்கு உட்பட்டு இந்தப் பொருள்களை ஏலம் விட்டால் ஜெயலலிதாவின் நல விரும்பிகள் அவற்றை வாங்கி பொக்கிஷமாகப் பாதுகாத்து வைப்பார்கள். ஏலம் மூலம் கிடைக்கும் பணத்தை மக்கள் நலப் பணி
களுக்குப் பயன்படுத்தலாம்," என தமது கடிதத்தில் கூறியுள்ள அவர், நீதிபதியின் பதிலை எதிர்பார்க்கிறார்.
மரண விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய கெடு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம், தனது இறுதி அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி சமா்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2017 முதல் பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்து வந்த ஆணையத்திற்கு இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய 12 முறை கால அவகாசம் அளிக்கப்பட்டது.