போதைப்பொருள் விற்போரின் சொத்துகளை முடக்க ஏற்பாடு

போதைப்பொருள் விற்போரின் சொத்துகளை முடக்க ஏற்பாடு

1 mins read
291d2d64-1fad-4bff-a804-4735a9b734fc
ரசாயன ஆலைத் தீயில் போட்டு 1,300 கிலோ கஞ்சா உள்ளிட்ட ஏராளமான போதைப்பொருள்கள் அழிக்கப்பட்டன. படம்: ஊடகம் -

செங்­கல்பட்டு: சென்­னை­யில் 68 வழக்­கு­களில் பறி­மு­தல் செய்­யப்­பட்ட ரூ.2 கோடி மதிப்­புள்ள 1,300 கிலோ கஞ்சா, 30 கிராம் ஹெரா­யின், பிர­வுன் சுகா் ஆகிய போதைப் பொருள்­களை அழிக்க நீதி­மன்­றத்­தில் உத்­த­ரவு பெறப்­பட்­டது.

செங்­கல்­பட்டு அருகே தென்­மேல்­பாக்­கத்­தில் உள்ள தனியாா் ரசா­ய­னப் பொருள்­கள் அழிக்­கும் ஆலை­யில் சுமாா் ஆயி­ரம் டிகிரி செல்­சியஸ் வெப்­ப­நி­லை­யில் சனிக்­கி­ழமை சென்னை பெரு­ந­கர காவல் ­ஆணையா் சங்கா் ஜிவால் மற்­றும் அதி­கா­ரி­கள் முன்­னி­லை­யில் இந்த போதைப் பொருள்­கள் அழிக்­கப்­பட்­டன. இதன் பின்னா் ஆணை­யர் சங்கா் ஜிவால் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசி­னார்.

"சென்­னை­யில் போதைப்­

பொ­ருளை ஒழிக்க காவல்­துறை பல்­வேறு நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது. போதைப்­பொ­ருள் பழக்­கத்தை முற்­றி­லும் தடுக்­கும் வகை­யில் பொது­மக்­கள், பள்ளி-கல்­லூரி மாண­வா்­க­ளி­டம் விழிப்­பு­ணா்வு ஏற்­ப­டுத்­தப்­ப­டு­கிறது.

"இது­வரை 489 பள்ளி, கல்­லூ­ரி­களில் சுமாா் 45,000 மாண­வா்­களைச் சந்­தித்து போதைப் பொருள்­களைப் பயன்­ப­டுத்­து­

வ­தால் ஏற்­படும் தீயவிளை­வு­கள் குறித்து விழிப்­பு­ணா்வு ஏற்­ப­டுத்­தி­யுள்­ளோம். சென்­னை­யில் தொடா்ச்­சி­யாக போதைப்­பொ­ருள் கடத்­தல், விற்­பனை போன்ற செயல்­களில் ஈடு­ப­டு­கி­ற­வா்­க­ளின் சொத்­து­களை முடக்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ளோம். பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மேலும் 2,000 கிலோ கஞ்சாவை அழிக்க நீதிமன்ற அனுமதி பெற முயன்றுவருகிறோம்," என்­றார்.