'முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும்'

'முகக்கவசம் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும்'

1 mins read
bed1dc89-a71a-495e-9d45-894d33767f87
-

சென்னை: தமி­ழ­கத்­தில் தின­சரி கொரோனா பாதிப்பு 1,500ஐ நெருங்கி வரும் நிலை­யில், பொது இடங்­களில் முகக்கவ­சம் அணியா­ விடில் அப­ரா­தம் விதிக்­கப்­படும் என்று மாநில அரசு எச்­ச­ரித்­துள்­ளது.

குறிப்­பாக நகர்ப்­பு­றங்­களில் இந்­த பாதிப்பு அதி­க­ரித்து வரும் நிலையில், முன்­னெச்­ச­ரிக்­கை­யாக தடுப்பு நட­வ­டிக்­கை­க­ளை­யும் பரி­சோ­த­னை­க­ளை­யும் மீண்­டும் தீவி­ரப்­ப­டுத்தி உள்ள அரசு, கட்டுப் பாடுகளையும் விதித்துள்ளது.

இது­கு­றித்து, மக்­கள் நல்­வாழ்­வுத் துறை வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், பொது இடங்­களில் சமூக இடை­வெ­ளி­யைப் பின்­பற்­றா­மல் இருத்­தல், முகக்­க­வ­சம் அணி­யா­மல் இருத்­தல் உள்ளிட்ட கொவிட் தடுப்பு முறை­களை முறை­யா­கப் பின்­பற்­றா­மல் கவ­னக்குறை­வாக இருப்­ப­தால்தான் தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. கூட்­டம் அதிக முள்ள இடங்­க­ளைத் தவிர்த்து, வாய்-­மூக்கை மூடி­ய­படி முகக்கவ­சத்தை அணி­யும்­படி மக்களை அது கேட்­டுக்­கொண்­டுள்­ளது.