நாமக்கல்: தமிழகத்தில் முட்டை ஒன்றின் விலை ரூ.5.50 காசுகள் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
கடந்த 50 ஆண்டுகால வரலாற்றில் இந்த அளவுக்கு முட்டை விலை உயர்ந்துள்ளது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
முட்டைக்குப் பெயர் பெற்ற நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் ேமற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.
கோழித் தீவனத்தின் மூலப்பொருள்கள் விலை உயர்வு, பண்ணைப் பராமரிப்புச் செலவு அதிகரிப்பின் காரணமாக பண்ணைகளில் விடப்படும் முட்டையிடும் கோழிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டன.
இதனால், உற்பத்தி குறைந்து கோடைக்காலம் தொடங்கியது முதல் முட்டையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இச்சூழலில், முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை ரூ.5.50 காசாக நிர்ணயம் செய்துள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக கோழி இறைச்சி விலையும் மீன் விலையும் அதிகமாக இருந்து வரும் நிலையில், தற்போது முட்டை விலையும் உயர்ந்திருப்பதால் ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

