ெசன்னை: தமிழகத்தில் இணைய ரம்மி சூதாட்டங்களைத் தடை செய்வதற்கான அவசரச் சட்டத் திற்கு தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமைச் செயல கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்ச ரவைக் கூட்டத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு அளித்த அறிக்கை விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, இணைய ரம்மி விளையாட்டை தடைசெய்வது தொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு ஆளுநர் ஒப்பு தல் அளித்தபின்னர் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என தமிழக ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இணைய ரம்மி விளையாட்டு களைத் தடை செய்வது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு 71 பக்க அறிக்கைகளை நேற்று முன் தினம் முதல்வரிடம் சமர்ப்பித்தார்.
அதில், இந்த விளையாட்டு திறனை வளர்க்கவில்லை. மக்களின் உடல்நலன் இந்த விளையாட்டுகளால் பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் மட்டும் இந்த விளையாட்டுகளில் பணத்தை இழந்த 17 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர்.
இணைய விளையாட்டுகளை முறைப்படுத்துவது இயலாது. தடைசெய்வது ஒன்றே சிறந்த வழி.
இணைய விளையாட்டு நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டும் செயல்படுகின்றன. இதன் அடிப்படையில், அவசர சட்டத்தை தமிழக அரசு கொண்டுவரலாம் என தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதனிைடயே, இணைய சூதாட்ட தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அப்பாவிகள் உயிரை இழப்பதையும் அவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருவதையும் தடுக்கும் நோக்குடனான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது ஆகும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

