பயங்கரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கண்காணிப்பு ஒத்திகை

கன்­னி­யா­கு­மரி: மாநி­லம் முழு­வ­தும் உள்ள கடற்­க­ரைப் பகு­தி­களில் நேற்று பாது­காப்பு ஒத்­தி­கைப் பயற்சி தொடங்கியது. இப்பயிற்சி இன்று மாலை­யு­டன் நிறை­வ­டை­கிறது.

கடலோரக் காவல்படையினரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு காவல் துறையினரும் இணைந்து 'சாகர் கவாச்' என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சியை நடத்தினர்.

பயங்­க­ர­வா­தி­கள் போல வேட­மிட்டு கடல்­வ­ழி­யாக ஊடு­ரு­வு­ம் கட­லோ­ரக் காவல்படையினரை உள்­ளூர் காவல்­து­றை­யி­னர் மடக்­கிப் பிடிக்­க­வேண்­டும் என்­ப­து­தான் இந்­த ஒத்­தி­கை­யின் உத்­த­ரவு.

இதன்­படி, கும்­மி­டிப்­பூண்டி முதல் குமரி வரை­யி­லான கட­லோ­ரப் பகுதி­களில் பயங்­க­ர­வா­தி­கள் போல் ஆயு­தங்­க­ளு­டன் ஊடு­ரு­விய கட­லோ­ரக் காவல்படையினரை உள்ளூர் காவல்­து­றை­யி­னர் பிடித்­த­னர்.

கன்­னி­யா­கு­மரி கடல் பகு­தி­யில் மூன்று அதி­ந­வீன சுற்றுக்காவல் பட­கு­களில் சென்று பயங்­க­ர­வா­தி­களின் ஊடு­ருவலை முறியடிக்க கட­லோ­ரக் காவல்படையினர் தீவிர கண்­கா­ணிப்பில் ஈடு­பட்­ட­னர்.

குமரியில் உள்ள 42 கடற்­கரை கிரா­மங்­க­ளி­லும் 24 மணி நேர­மும் கண்­கா­ணிப்பில் ஈடு­பட்­ட­னர்.

மும்பையில் கடந்த 2008ல் பயங்கரவாதிகள் கடல் வழி புகுந்து தாக்குதல் நடத்தினர். அதன்பிறகு, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி கடலோரப் பாதுகாப்பை மாநில அரசு கள் பலப்படுத்தி வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!