அதிக ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு ரூ.2,000 வரை அபராதம்

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களுக்கு ரூ.2,000 வரை அபராதம்

1 mins read
9296e8d9-6473-46ad-8d15-9008984c45a5
சென்னையில் ஒலி மாசு விழிப்புணா்வு முகாமை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் தொடங்கி வைத்தாா். நேற்று முன்தினம் தொடங்கிய இந்த விழிப்புணா்வு இயக்கம் வரும் ஜூலை 3ஆம் ேததி வரை கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதிக ஒலி எழுப்பும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அபராதம் விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சங்கர் ஜிவால் கூறினார். படம்: இபிஏ -

சென்னை: சென்னையில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பு வோருக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கியமான ஒலி அலகு என்பது பகலில் 55 டெசிபலையும் இரவில் 40 டெசிபலையும் தாண்டக் கூடாது என்றும் இதுதான் உடலுக் குத் தீங்கு விளைவிக்காத ஒலி அலகுகள் என்றும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

ஆனால், இந்த ஒலி அலகுகளை மீறும் வகையில் காதைப் பிளப்பது போல் பல வாகனங்களும் ஒலி எழுப்பிச் செல்கின்றன, வருகின்றன.

இதைக் கருத்தில்கொண்டு ஒலி மாசைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் 'நோ ஹான்கிங்' (ஹாரன் ஒலி எழுப்புவதில்லை) என்ற விழிப் புணா்வு இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொடா்ச்சி யாக, தேவையின்றி ஹாரன் அடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஓட்டுநா்களுக்கு விழிப் புணா்வு ஏற்படுத்தி வருகின்றனர்.