மீண்டும் சூடுபிடிக்கும் கொடநாடு சம்பவ வழக்கு

மீண்டும் சூடுபிடிக்கும் கொடநாடு சம்பவ வழக்கு

1 mins read
d916a601-717d-427c-92cc-2c5d23e9d893
-

சென்னை: கொட­நாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்­டும் சூடு­பி­டிக்­கிறது. முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் கார் ஓட்­டு­நரி­டம் தனிப்­படை தொடர்ந்து விசா­ரணை நடத்­தி­வ­ரு­கிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொட­நாடு கொலை, கொள்ளை சம்­ப­வம் தொடர்­பில் மறு விசா­ரணை நடக்­கிறது.

முன்­னாள் முதல்­வ­ரின் தோழி­ சசி­கலா, அவ­ரது உற­வி­னர் விவேக் ஜெய­ரா­மன், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆறுகுட்டி, ஜெய­ல­லி­தா­வின் நேர்­முக உத­வி­யா­ள­ராக இருந்த பூங்­குன்­றன் உள்­ளிட்ட பலரும் விசா­ரிக்கப்பட்டனர்.

இந்­நி­லை­யில், ஜெய­ல­லி­தா­வின் மற்­றொரு கார் ஓட்­டு­ந­ராக இருந்த கண்­ண­னி­டம் தனிப்­படை அதி­காரி­கள் தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­வதால் கொட­நாடு வழக்கு மீண்­டும் சூடு­பி­டிப்பதாக தகவல்கள் கூறின.