தினகரன்:ஓராண்டாகியும் வாய் திறக்காதது ஏன்

தினகரன்:ஓராண்டாகியும் வாய் திறக்காதது ஏன்

1 mins read
aa5d43f6-9050-460e-a49f-d24201f35af3
-

சென்னை: தமிழ்­நாட்­டில் எடப்­பாடி பழ­னி­சாமி தலை­மை­யில் அதி­முக ஆட்சி நடந்­த­போது மீன்­வ­ளத்­துறை வாக்­கி­டாக்­கி­களை வாங்­கி­ய­தில் ஊழல் நடந்ததாகக் கூறப்­பட்­டது.

ஊழல் ஒழிப்­புத் துறை அந்த விவ­கா­ரம் பற்றி ஓராண்டுக்­கும் மேலாக இன்­ன­மும் மவு­ன­மாக இருப்­பது ஏன் என்று அம­முக தலை­வர் டிடிவி தின­க­ரன் கேட்டார்.

முன்­னாள் அமைச்­ச­ரான டி ஜெய­கு­மார், அப்­போது மீன்­வ­ளத்­துறை அமைச்­ச­ராக இருந்­தார்.

இப்­போது இவர் அதி­மு­க­வின் இரண்டு பெரும் தலை­வர்­களில் ஒரு­வ­ரான ஓ. பன்­னீர் செல்­வத்தை எதிர்த்து வரு­கி­றார்.

இப்­போது திமுக ஆட்சி நடக்­கிறது. ஆனால் ஊழல் ஒழிப்­புத் துறை வாக்­கி­டாக்கி விவ­கா­ரம் பற்றி இன்­ன­மும் வாய்­மூ­டியே இருந்து வரு­கிறது.

வாக்­கி­டாக்கி ஊழல் பற்றி புகார் தாக்­க­லாகி அது நீதி­மன்­றம் வரை சென்று இருக்­கிறது.

இருந்­தா­லும்­கூட இதில் திமுக ஆட்­சி­யின் கீழ் எந்த நட­வ­டிக்­கை­யும் இடம்­பெ­ற­வில்லை என்று டுவிட்­ட­ரில் தின­க­ரன் குறிப்­பிட்டு­உள்ளார்.