ஸ்டாலின்-அதிபர் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று சந்திப்பு

ஸ்டாலின்-அதிபர் வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று சந்திப்பு

1 mins read
f0fb95e8-7155-44fe-85ff-1a900679df8f
-

சென்னை: இந்­திய அதி­பர் தேர்­தல் வேட்­பா­ளர் யஷ்­வந்த் சின்கா இன்று தமி­ழக முதல்­வர் மு க ஸ்டா­லினை சந்­திக்­கி­றார்.

தேர்தலில் தம்மை ஆத­ரிக்­கும்­படி அந்­தச் சந்­திப்­பின்­போது முதல்­வ­ரை திரு சின்கா கேட்­டுக்­கொள்­வார் என்று நேற்று தக­வல்­கள் தெரி­வித்­தன. இந்­திய அதி­பர் தேர்­தல் அடுத்த மாதம் 18ஆம் தேதி நடக்­கிறது.

அந்­தத் தேர்­த­லில் மத்­திய ஆளும்­கட்­சி­யான பாஜக தலைமை தாங்­கும் தேசிய ஜன­நா­யகக் கூட்டணி சார்­பில் பழங்­கு­டி­யின பெண் தலை­வர் திர­வு­பதி முர்மு கள­மி­றங்­கு­கி­றார்.

எதிர்க்­கட்­சி­க­ளின் பொது வேட்­பா­ள­ராக முன்­னாள் மத்­திய அமைச்­சர் யஷ்­வந்த் சின்கா வேட்பு மனுத் தாக்­கல் செய்து இருக்­கி­றார்.

யஷ்­வந்த் சின்கா பல அர­சி­யல் கட்சித் தலை­வர்­க­ளை­யும் நேரே சந்­தித்து தனக்கு ஆத­ரவு திரட்டி வரு­கி­றார். இதை­யொட்டி அவர் இன்று சென்­னை­யில் முதல்­வர் ஸ்டா­லினை சந்­தித்து ஆத­ரவு கோரு­வார் என்று தக­வ­ல் கூறியது.

அதி­பர் தேர்­த­லில் பாஜக ஆதரிக்­கும் வேட்­பா­ளர் திர­வு­பதி முர்முவே வெற்றி பெறு­வார் என்று நம்­பப்­ப­டு­கிறது.