சென்னை: ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறாது. என் ஆதரவும் தொண்டர்களின் ஆதரவும் ஓ.பன்னீர்செல்வத்துக்குத்தான். இதைச் சொல்வதில் எனக்குப் பயமில்லை. இதனால் என் பதவி பறிபோனாலும் கவலையில்லை என்று நடிகரும் மறைந்த முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை தான் வேண்டும் என ஈபிஎஸ் நினைத்தால், ஓபிஎஸ்சை தலைமை ஏற்கச் சொல்லிவிட்டு ஈபிஎஸ் விலகிவிட வேண்டியதுதானே என வும் அவர் கேட்டுள்ளார்.
எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளரான ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர் களிடம் பேசியபோது, "ஈபிஎஸ்சுக்கு எந்த ஆதரவும் இல்லை. மக்களின் கருத்துகளைக் கேட்டீர்களா? பகுதி, மாவட்டச் செயலாளர்கள் ஈபிஎஸ்சுக்குத்தான் ஆதரவளிப்பேன் என்பார்கள். அதனை ஒரு பயத்தில் சொல்கிறார்கள். நான் ஓபிஎஸ்சுக்குத் தான் ஆதரவு கொடுப்பேன். இருவருமே நன்றாகவே கட்சியை வழிநடத்தி வந்தனர். ஆனால், ஏன் தேவையின்றி ஒற்றைத் தலைமையைக் கொண்டு வர விரும்புகிறார்கள்? ஏன் ஓபிஎஸ்சை கட்சியை விட்டு துரத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை.
"எத்தனையோ அவர் நல்லது செய்துள்ளார். பலமுறை கட்சியைக் காப்பாற்றி உள்ளார்.
"கட்சியில் பிரச்சினை வரக்கூடாது என விட்டுக்கொடுத்து போனது தவறா? விட்டுக்கொடுத்துப்போனால் கட்சியை ஒட்டுமொத்தமாக விட்டுக்கொடுத்துப் போகவேண்டும் என்று சொல்வதா?" என்றும் அவர் வினவியுள்ளார்.
அதிமுக கட்சி இரண்டாகப் பிரியக்கூடாது, உடையக்கூடாது என்று தான் என் தாத்தா (எம்ஜிஆர்) நினைத்தார். அவர் கட்டிக்காத்த இயக்கமிது. இப்போது ஏன் ஒற்றைத் தலைமை?
ராமச்சந்திரன்

