பணியில் இல்லாத ஊழியர் இடைநீக்கம்; ஜமதக்கனி பெயருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ.400 கோடி காலணிப் பூங்கா

பணியில் இல்லாத ஊழியர் இடைநீக்கம்; ஜமதக்கனி பெயருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ.400 கோடி காலணிப் பூங்கா

2 mins read
b7dbdbb4-8fac-4009-891c-b3a29412ca6f
அரசு ஆண்கள் பள்ளியில் திடீர் ஆய்வு நடத்திய முதல்வர்,மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். படம்: ஊடகம் -

ராணிப்­பேட்டை: ராணிப்­பேட்டை யில் உள்ள பணப்­பாக்­கத்­தில் 250 ஏக்­கர் பரப்­ப­ள­வில், ரூ.400 கோடி செல­வில் கால­ணி­க­ளைத் தயா­ரிக்­கும் மாபெ­ரும் பூங்கா அமைக்­கப்­படும். இதன்­மூ­லம் 20,000 பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று தெரி­வித்­தார்.

திருப்­பத்­தூர், வேலூர், ராணிப் பேட்டை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கு மூன்று நாள் பய­ணம் மேற்­கொண்­டுள்ள முதல்­வர், முடி­வுற்ற பணி களைத் திறந்­து­வைத்து, புதிய பணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்டினார்.

ராணிப்­பேட்­டை­யில் நேற்று நடந்த விழா­வில், ஏறக்­கு­றைய 60,000 பய­னா­ளி­க­ளுக்கு ரூ.250 கோடி அளவில் நலத்­திட்ட உதவி­கள் வழங்குவதை தொடங்கி வைத்து முதல்­வர் பேசி­னார்.

"நரிக்­கு­ற­வர் வீடு­க­ளுக்­குச் சென்று நான் விளம்­ப­ரம் தேடிக் கொள்­வ­தாக எதிர்க்­கட்­சி­கள் குற்­றம்­சாட்டி உள்ளன. 50 ஆண்டுகளாக அர­சி­ய­லில் உள்ள எனக்கு ஏன் விளம்­ப­ரம்? விளம்­பரத்­திற்­காக திமுக அரசு எந்த திட்­டத்தையும் செயல்படுத்தவில்லை," என்றார்.

ராணிப்­பேட்­டை­யில் ரூ.118.40 கோடி செல­வில் கட்­டப்­பட்­டுள்ள புதிய மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லக வளா­கத்­தை­யும் திறந்துவைத்­தார்.

இந்த வளா­கத்­துக்கு விடு­த­லைப் போராட்ட வீர­ரும் அறி­ஞ­ரு­மான ஜம­தக்­க­னி­யின் பெய­ரைச் சூட்ட வேண்­டும் என பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் முன்னதாக கோரி யி­ருந்­தார். அதன்­படி, ஜம­தக்­க­னி­யின் பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது.

தமிழ்­நாட்­டில் விடு­த­லைக்­கா­கப் போராடி அதிக காலம் சிறைத் தண் டனை அனு­ப­வித்­த­வர் ஜம­தக்­கனி. மார்க்ஸ் எழு­திய 'டாஸ் கேப்பிடல்' நூலை முத­லில் தமி­ழில் மொழி பெயர்த்­த­வர் அவர்­தான் என்­றும் ராம­தாஸ் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத­னி­டையே, ராணிப்­பேட்டை காரைக்­கூட் சாலைப் பகுதியில் உள்ள அரசு ஆண்­கள் பள்­ளி­யில் திடீர் ஆய்வு நடத்­திய முதல்­வர், பணி நேரத்­தில் இல்­லாத விடுதி கண்­கா­ணிப்­பா­ளர் மீது நட­வ­டிக்கை எடுக்கவும் உத்­த­ரவிட்டார்.