தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் காலியாகி இருந்த எட்டாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
திமுக வேட்பாளர் முகம்மது இப்ராஹிம் மனுத்தாக்கல் செய்தார். அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சினை காரணமாக யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால், வேறு யாரும் எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்யாததால் திமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் சான்றிதழ் வழங்கினார்.

