37 பவுன் நகை, 12 லட்சம் பணம் மோசடி; பெண் சாமியார் கைது

37 பவுன் நகை, 12 லட்சம் பணம் மோசடி; பெண் சாமியார் கைது

2 mins read
bd6de1d4-098e-4049-91e6-f478e0df79e1
-

புதுச்­சேரி: தான் ஒரு சாமி­யார் என்­றும் வயிற்­று­வ­லி­யைக் குணப் படுத்தி பெண்­ணின் கண­வ­ரைக் காப்­பாற்­று­வ­தா­க­வும் கூறி 37 பவுன் தங்க நகை, ரூ.12 லட்­சத்தை மோசடி செய்த போலி பெண் சாமி­யார் கைது செய்­யப்­பட்­டார்.

யூனி­யன் பிர­தே­ச­மான புதுச்­சேரியில் உள்ள இந்­திரா நக­ரைச் சேர்ந்­த­வர் முரு­கன், 45, மின்­சா­ரப் பொறி­யா­ளர். இவ­ரது மனைவி லட்­சுமி, 35. வீட்­டில் தையல் எந்­தி­ரம் வைத்து துணி தைத்­துக் கொடுத்து வரு­கி­றார். இவர்­க­ளுக்கு ஒரு மக­னும் ஒரு மகளும் உள்­ள­னர்.

லட்­சு­மி­யு­டன் அவ­ரது மாம­னார் துரை­ரா­ஜன், மாமி­யார் உத­ய­கு­மாரி ஆகி­யோ­ரும் வசித்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில், கடந்த 2020ல் லட்­சு­மி­யின் வீட்டுக்கு வாடகைக்கு குடிபுகுந்தார் சத்­தி­ய­வதி, 26.

ஒரு­ச­ம­யம், லட்­சு­மி­யின் கண­வர் முரு­க­னுக்கு வயிற்­று­வலி ஏற்­பட, தான் ஒரு மந்­தி­ர­வாதி என வும் முரு­க­னுக்கு ஏற்­பட்ட வயிற்று வலி­யைப் பரி­கா­ரம் மூலம் சரி­செய்து விட­லாம் என­வும் சத்­தி­ய­வதி கூறியிருக்­கி­றார்.

இதனை நம்­பிய லட்­சுமி தனது கண­வ­ருக்­குத் தெரி­யா­மல் பூசைக் கான ஏற்­பா­டு­க­ளைச் செய்­தார். பூசை­யின்­போது பணம், நகை­களை வைக்­கும்­படி கூறி­ய­தால் லட்­சுமி அதன்­படி செய்­தார். இப்படி பல நாள் பூசை செய்­தும் முரு­க­னின் உடல்­நிலை சீரா­க­வில்லை. இந் நிலை­யில் முரு­க­னுக்கு நீரி­ழிவு நோய் இருப்­பது தெரி­ய­வர, அதற்­கான சிகிச்சை எடுத்­த­போது வயிற்றுவலி குண­மா­கி­விட்­டது.

ஆனால், தான் செய்த பரி­கார பூசையால்தான் முருகனின் வயிற்று­வலி குணமானது என்று கூறினார் சத்தியவதி.

இந்நிலை­யில் லட்­சு­மி­யின் மாம­னார் துரை­ரா­ஜ­னுக்கு உடல் நலம் பாதிக்­கப்­பட, இதேபோல் பரி­கார பூசை செய்­யப்­பட்­டது. ஆனால், துரை­ரா­ஜன் உயிரிழந்தார்.

இதையடுத்து, எங்கே தான் சிக்­கிக்­கொள்­வோமோ எனப் பயந்து போன சத்­தி­ய­வதி வீட்­டைக் காலி செய்­து­விட்டு தலை­ம­றை­வா­னார்.

அதன்­பி­ன்னரே தான் ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்த லட்சுமி, பரி­கார பூசையின் பெயரில் பணம், நகைகளைப் பறிகொடுத்தது குறித்து கோரி­மேடு காவல்­து­றை­யில் புகார் அளித்தார்.