சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை திமுக இயக்குவதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சாடியுள்ளார்.
சென்னையில் எடப்பாடி பழனி சாமி இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி.சண்முகம், "தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்காமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
"லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் திமுகவின் தொண்டர் படையாகச் செயல்படுகின்றனர்," என குற்றம்சாட்டினார்.
"திமுகவுடன் உறவாடிக் ெகாண்டே, அதிமுக இயக்கத்துக்கு துரோகம் செய்து கொண்டிருப் பவர்களுக்குத் துணையாக ஸ்டாலின் அரசு உள்ளது.
"திமுக அரசு எங்களை மிரட்டப் பார்க்கிறது, பணிய வைக்கப் பார்க்கிறது. ஆனால், ஒருபோதும் இது நடக்காது.
"ஓபிஎஸ் திமுகவுடன் உறவாடி அதிமுகவுக்குத் துரோகம் செய்து வருகிறார். ஓபிஎஸ் பின்னால் திமுக அரசு உள்ளது என்ற குற்றச் சாட்டை பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் முன்வைத்து வருகின்றனர். இதில் எந்த ரகசியமும் இல்லை. கைப்புண்ணுக்கு எதற்கு கண்ணாடி?" என்று சிவி சண்முகம் வினவினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தூண்டு தல் காரணமாகவே திமுக அரசு எஸ்.பி.வேலுமணி மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

