150 அடி உயரக் கம்பத்தில் பறந்த தேசியக்கொடி

1 mins read
4e30705c-5813-4c10-b912-202982c3207e
-

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் 150 அடி உயரக் கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது. கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், மகாதா­ன­பு­ரம் ரவுண்­டானாவில் 150 அடி உயர கொடிக்­கம்­பம் அமைக்­கப்­பட்­டது.

அதிமுக ராஜ்யசபா உறுப்பினர் விஜயகுமார், தன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 75 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, இதற்கான பணிகளைத் துவக்கி னார்.

இது­தான் தமி­ழ­கத்­தின் பெரிய கொடிக் கம்­பம். அதில், 32 அடி உயரம், 48 அடி நீளம், அகலம் கொண்ட தேசி­யக் ெகாடியை அமைச்­சர் மனோ தங்­க­ராஜ், எம்பி விஜ­யகு­மார் ஆகி­யோர் ஏற்றி வைத்­த­னர்.

இரவு நேரத்­தில் மின்­வி­ளக்­கில் ஜொலிக்­கும் வகை­யில் கொடிக்­கம்­பம் அமைக்­கப்­பட்டுள்­ளது.