திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி என்ற 52 வயது பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு, 12,000 ரூபாயில் நான்கு தோல் காலணி களைத் தயாரித்து வழங்கி பக்தர் கள் வியக்க வைத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அருள்மிகு நெல்லையப்பர்-காந்தி மதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி யானை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வயோதிகம் காரண மாக காலில் மூட்டு வலி ஏற்பட்டு பெரும் அவதிப்பட்டு வருகிறது.
இதனால், காந்திமதி யானைக்கு நடக்கும்போது கால்வலி ஏற்படாமல் இருக்கவும் மூட்டு வலியில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் உதவும் வகையில் மருத்துவக் குணம் வாய்ந்ததாகக் கூறப்படும் தோல் காலணிகளைப் பக்தர்கள் யானைக்கு வழங்கியுள்ளனர்.
பார்ப்பதற்கு குடுவைகளைப் போல் காட்சியளிக்கும் காலணிகள் குறித்து யானைப் பாகன் கூறுகையில், “இக்காலணிகளை யானையின் கால்களில் பொருத்தி பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு திருவிழாக்களிலும் சுவாமி சப்பர வீதி உலாவின்போதும் யானைக்கு காலணிகள் பொருத்தப்பட்டு உலா வரும்,” என்றார்.
ஆனித் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளின்போது காந்திமதி யானை சுவாமியின் முன்பு கம்பீரமாகச் செல்வது வழக்கம்.
தமிழகத்திலேயே இப்போதுதான் முதன்முதலாக நெல்லையப்பர் கோவில் யானைக்கு காலணி அணிவிக்கப்பட்டுள்ளது.