தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கால் வலியால் அவதி: காந்திமதி யானைக்கு தோல் காலணிகள்

1 mins read
64a74e3a-e1f8-4c28-8038-fa11e5206fe8
காந்திமதி யானைக்காக பிரத்யேகமாகத் தயாரான நான்கு காலணி களைக் கோவில் நிர்வாகத்திடம் வழங்கிய பக்தர்கள். படம்: ஊடகம் -

திரு­நெல்­வேலி: நெல்­லை­யப்­பர் கோயி­லில் காந்­தி­மதி என்ற 52 வயது பெண் யானை பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கிறது. அதற்கு, 12,000 ரூபா­யில் நான்கு தோல் காலணி களைத் தயா­ரித்து வழங்கி பக்­தர் கள் வியக்க வைத்­துள்­ள­னர்.

திரு­நெல்­வேலி மாவட்­டத்­தில் அருள்­மிகு நெல்­லை­யப்­பர்-காந்தி மதி அம்­மன் கோயில் உள்­ளது. இந்­தக் கோயி­லுக்­குச் சொந்­த­மான காந்­தி­மதி யானை நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­து­டன், வயோ­தி­கம் காரண மாக காலில் மூட்டு வலி ஏற்­பட்டு பெரும் அவ­திப்­பட்டு வரு­கிறது.

இத­னால், காந்­தி­மதி யானைக்கு நடக்­கும்­போது கால்­வலி ஏற்­ப­டா­மல் இருக்­க­வும் மூட்டு வலி­யில் இருந்து பாது­காத்­துக்­கொள்­ள­வும் உத­வும் வகை­யில் மருத்­து­வக் குணம் வாய்ந்­த­தா­கக் கூறப்­படும் தோல் கால­ணி­க­ளைப் பக்­தர்­கள் யானைக்கு வழங்­கி­யுள்­ள­னர்.

பார்ப்­ப­தற்கு குடு­வை­க­ளைப் போல் காட்­சி­ய­ளிக்­கும் கால­ணி­கள் குறித்து யானைப் பாகன் கூறுகையில், "இக்கால­ணி­களை யானை­யின் கால்­களில் பொருத்தி பயிற்சி அளிக்­கப்­படும். அதன்­பிறகு திரு­வி­ழாக்­க­ளி­லும் சுவாமி சப்­பர வீதி உலா­வின்­போ­தும் யானைக்கு கால­ணி­கள் பொருத்­தப்பட்டு உலா வரும்," என்­றார்.

ஆனித் திரு­விழா உள்­ளிட்ட முக்­கிய நிகழ்­வு­க­ளின்­போது காந்தி­மதி யானை சுவாமி­யின் முன்பு கம்­பீ­ர­மாகச் செல்வது வழக்கம்.

தமி­ழ­கத்­தி­லேயே இப்போதுதான் முதன்­மு­த­லாக நெல்லையப்பர் கோவில் யானைக்­கு காலணி அணி­விக்­கப்­பட்­டுள்­ளது.