தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முதலீட்டாளர் மாநாடு: குவிந்தது ரூ.125,000 கோடி முதலீடு; 74,898 பேருக்கு வேலைவாய்ப்பு 60 ஒப்பந்தங்கள் கையெழுத்து

2 mins read
3375cccc-52dd-449f-8717-2745274b1953
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் முன்பு 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. படம்: மாலைமலர் -

சென்னை: சென்னை நுங்­கம்­பாக்­கத்­தில் உள்ள தாஜ் நட்­சத்­திர ஹோட்டலில் முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு நேற்று நடை­பெற்­றது.

முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தலை­மை­யில் நடை­பெற்ற இம்மாநாட்­டில், தமிழகத்தில் தொழில் நிறுவனங் களைத் தொடங்க 60 தொழில் அதிபர்கள் புரிந்துணர்வு ஒப்பந் தத்தில் கையெ­ழுத்­திட்டனர்.

இதன்­மூ­லம் ரூ.125,000 கோடி முத­லீ­டு­கள் தமி­ழ­கத்­திற்கு ஈர்­க்கப் ­பட உள்­ளன. அத்­து­டன், இந்த முத­லீட்­டால் 74,898 பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கவும் வாய்ப்புள்ளதாக தமி­ழக ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்டுள்­ளன.

இம்­மா­நாட்டைத் தொடங்­கி­வைத்து முதல்­வர் உரை­யாற்­றி­ய­போது, தமி­ழ­கத்­தில் தொழில் தொடங்க வரு­மாறு தொழி­ல­தி­பர்­களுக்கு அழைப்பு விடுத்­தார்.

"கடந்த 2020ல் தொழில் தொடங்குவதற்கு சிறந்த மாநிலங் களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழகத்தை இப்போது மூன்றாவது இடத்துக்குக் கொண்டு வந்துள்ளோம். விரைவில் முதலிடத் துக்குக் கொண்டு வருவதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம்.

"தமி­ழ­கத்­தில் தொழில் தொடங்கு­வ­தற்­கான சூழ­லும் கட்­ட­மைப்பு வச­தி­களும் மிக­வும் ஏது­வாக உள்­ள­தா­க­வும் சாலை, ஏற்று­மதி-இறக்­கு­மதி, குடி­நீர், மின்­சாரம் உள்ளிட்ட வசதிகள் உள்­ள­தா­க­வும் தொழில் தொடங்க விரும்­பும் நிறு­வனங்­க­ளுக்கு அனு­மதி கொடுப்­ப­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளை­யும் அரசு முன்­னின்று செய்துதரும்," என்­றும் கூறி­னார்.

இந்­தப் புதிய 60 ஒப்­பந்­தங்­கள் மூலம் புதி­தாக 125,000 கோடி முதலீ­டு­கள் தமி­ழ­கத்­துக்கு ஈர்க்­கப்­பட்டு, 74,898 பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் கிடைக்­கும் என்றும் உறுதிப்படுத்தினார்.

அத்­து­டன், இந்த நிகழ்ச்­சி­யில் ரூ.1,494 கோடி முத­லீட்­டில் முடி­வுற்ற 12 நிறு­வ­னங்­க­ளின் புதிய திட்­டங்­க­ளை­யும் முதல்­வர் தொடங்கி வைத்­தார். மேலும் ரூ.22,252 கோடி முத­லீட்­டில் அமைய உள்ள 21 தொழில் நிறு­வ­னங்­ களின் புதிய தொழிற்­சாலை­க­ளுக்­கும் அடிக்­கல் நாட்­டி­னார்.

இதன்­மூ­ல­மும் 24,754 பேருக்கு வேலை­வாய்ப்பு கிடைக்க வழி­வகை ஏற்­பட்­டுள்­ளது.

திமுக அரசு அமைந்து ஓராண்டு நிறைவுபெற்றுள்ள நிலை­யில், இது­வரை ரூ.220,000 கோடிக்கு தொழில் முத­லீ­டு­கள் தமி­ழ­கத்­துக்கு வந்­துள்­ள­தா­க­வும் இதன்­மூ­லம் 226,000 பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்டு உள்­ள­தா­க­வும் தொழில்­துறை அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு தெரி­வித்­துள்­ளார்.