ஓலைச்சுவடிகளை நூலாக வெளியிடும் வழக்கம் அற்றுப்போனது

1 mins read
0b6287d2-9436-4b3e-bdcc-aa1e40d87147
-

சென்னை: தமி­ழக அர­சின் நிதி­யு­த­வி­யு­டன் கல்­வெட்டு குறித்த கோடை காலப் பயிற்சி முகாம் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்­கி­யது. பயிற்­சி­யின் நிறைவு விழா சனிக்­கி­ழமை நடை­பெற்­றது.

இதில் சிறப்பு அழைப்­பா­ள­ராக ரோஜா முத்­தையா ஆராய்ச்சி நூல­கத்­தின் இயக்­குநா் சுந்தா் கணே­சன் பங்­கேற்­றார். அவர் பேசு­கை­யில், "1578ஆம் ஆண்டு, முதல் தமிழ் நூல் அச்­சி­டப்­பட்­டது. இன்று வரை ஏறக்­கு­றைய இரண்டு லட்­சம் நூல்­கள் தமி­ழில் வெளி­வந்­தி­ருக்­கும். சங்க இலக்­கி­யப் பதிப்­பு­களில் திரு­மு­ரு­காற்­றுப்­ப­டையே அதி­க பதிப்­பு­க­ளைக் கண்­டுள்­ளது. இது 70க்கும் மேற்­பட்ட பதிப்­பு­களில் வெளி­வந்­துள்­ளது," என்றாா் அவா்.

முன்­ன­தாக, தமிழ் வளா்ச்­சித் துறை இயக்­குநா் ந.அருள், விழா­வுக்குத் தலைமை வகித்­துப் பேசு­கை­யில், "ஆண்­டு­தோ­றும் சுவ­டி­களும் கல்­வெட்­டுகளும் புதிது புதி­தா­கக் கண்­ட­றி­யப்­ப­டு­கின்­றன. உவே­சா­வுக்­குப் பிறகு புதிய ஓலைச் சுவ­டி­களை நூல்­க­ளாக வெளி­யி­டு­கிற வாய்ப்பு ஏற்­ப­ட­வே­யில்லை. ஐந்­தி­ரம் போன்ற கற்­பனை நூல்­

க­ளைத்­தான் நாம் நம்ப வேண்­டி­யுள்­ளது. எனவே இது­பற்­றிய அறி­வி­யல் கண்­ணோட்­டம் உரு­வா­க­வேண்­டும்," என்றாா்.

ஓலைச்சுவடிகளைப்

பாதுகாக்க தொழில்நுட்பர்கள்

இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் சேகர்­பாபு வெளி­யிட்ட அறிக்­கை­யில், "பனை ஓலைச் சுவ­டி­களை பாது­காக்க தொழில்­நுட்­பப் பணி­யா­ளர்­கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். கோயில்­க­ளி­லும் மடங்­க­ளி­லும் கிடைக்­கப்­பெ­றும் அரிய பனை ஓலைச்சுவ­டி­க­ளைப் பாது­காக்க நட­ வ­டிக்கை எடுக்கப்படும்," என்றார்.