சத்தீஸ்கர்: இந்திய வரலாற்றில் முதன்முறையாக 10 மாதக் குழந்தைக்கு இந்திய ரயில்வேயில் பணி வழங்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பவர் ரயில்வே ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் நடந்த வாகன விபத்தில் ராஜேந்திரகுமாரும் அவரது மனைவியும் உயிரிழந்தனர். விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இவர்களது 10 மாத குழந்தை ராதிகா யாதவுக்கு ரயில்வே விதிமுறைகளின்படி பணி வழங்கப்பட உள்ளது. பாட்டியின் பராமரிப்பில் உள்ள குழந்தைக்கு தந்தையின் பணி வழங்கப்பட்டுள்ளது. கைக் குழந்தை என்பதால், அதன் கை ரேகையைப் பதிவு செய்து பணி நியமனம் உறுதிபடுத்தப்பட்டது. குழந்தை 18 வயதை பூர்த்திசெய்ததும், பணியில் சேரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

