கோவை: கோைவயில் உள்ள உண வகம் ஒன்றில் பணிபுரிந்து வரும் தர்மலிங்கத்துக்கும் திருநங்கை ஒருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், தர்மலிங்கத்தை திருநங்கைகள் பலரும் அடித்துத் தாக்கியுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்மலிங்கம் உயிரிழந்த நிலையில், அவரை தாக்கிய ஐந்து திருநங்கைகள் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவான கீர்த்தி என்ற திருநங்கையைத் துடியலூர் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
அண்மையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை யில் திருநங்கைகளை அழைத்து, விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தி, சாலை ஓரங்களில் நின்று பாலியல் தொழிலுக்கு ஆண்களை அழைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த 8ஆம் தேதி இரவு, துடியலூரில் உள்ள ஓர் உணவகத்தில் பணிபுரிந்து வந்த பொன்னமராவதியைச் சேர்ந்த தர்மலிங்கம், 49, என்பவர், தனது நண்பர் பிரவீனுடன் ரேஸ்மிகா என்ற திருநங்கையை நாடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, இவ்விரு ஆடவர் களுக்கும் திருநங்கை ரேஸ்மிகா வுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ரேஷ்மிகா கூச்சல் போட்டுள்ளார்.
இதனால், அங்கு ஓடி வந்த இதர திருநங்கைகள் மம்தா, கௌ தமி, ஹர்னிகா, ரூபி, கீர்த்தி உள்ளிட்டோர் தர்மலிங்கத்தையும் பிரவீனையும் கடுமையாகத் தாக்கி யுள்ளனர்.
இருவரில் பிரவீன் அங்கிருந்து தப்பி ஓடிவிட, தர்மலிங்கத்தை ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்கு கடுமையாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து திருநங்கைகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
படுகாயமடைந்த தர்மலிங்கம், இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விழுந்துவிட்டதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்.
எனினும், சிகிச்சை பெற்று வந்த தர்மலிங்கம் இறந்ததால் வழக்கை கொலை வழக்காக மாற்றி அவரை அடித்தவர்களைக் காவல்துறை யினர் தேடிவந்த நிலையில், இவர் கள் கைதாகி உள்ளனர்.

