சிங்கப்பூரில் ேவலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி

சிங்கப்பூரில் ேவலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி

2 mins read
5b717676-c200-48fe-96e9-c7af5cbaefdc
வடவள்ளியில் இயங்கி வரும் 'அஃேபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' நிறுவனம், சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதாக விளம்பரப்படுத்தி உள்ளது. இதனைப் பார்த்து விண்ணப்பித்தவர்களிடம் முன்பணமாக ரூ.2 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பணி ஆணை, விமான டிக்கெட்டுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.படம்: தமிழக ஊடகம் -

கோவை: சிங்­கப்­பூ­ரில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி, நூற்றுக் கணக்கான இளைஞர்களின் மூன்று கோடி பணத்தை மோசடி செய்துவிட்டதாக கோவை காவல் கண்­கா­ணிப்பாளர் அலு­வ­ல­கத்­தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்­டம், வட­வள்­ளி­யில் செயல்­பட்டு வந்த 'அஃேபார்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்' நிறு­வ­னம், இளை­ஞர்­களைச் சிங்­கப்பூரில் பணியில் அமர்த்துவதாக விளம்­பரம் செய்­திருந்தது.

பல­ரும் போட்­டி­போட்டு பணத் தைக் கட்டி, வேலையில் சேர ஆர்­வம் காட்­டிய நிலையில், அவர்­களிடம் விமான டிக்­கெட்டுகளை வழங்­கிய நிறு­வ­னத்­தினர், ஜூலை 8ஆம் தேதி சிங்­கப்­பூர் அைழத்­துச் செல்­வ­தா­க உறுதி அளித்துள்ளனர்.

ஆனால், அந்தக் குறிப்­பிட்ட தினத்­தில் இளைஞர்கள் பயணம் செல்ல தயா­ராகி வந்­த­போது நிறு­வ­னத்தைப் பூட்­டி­விட்டு நிர்­வா­கி­கள் தலை­ம­றை­வாகிவிட்­ட­னர்.

விமான டிக்­கெட்டு­களும் போலி என்­பது தெரி­ய­வர, தாங்கள் ஏமாற்­றப்­பட்­டதை உணர்ந்த 100க்கும் மேலான இளை­ஞர்­கள், டிரா­வல்ஸ் உரிமையாளர் ராம­மூர்த்தி மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு புகார் அளித்­துள்­ள­னர்.

விளம்பரத்தை நம்பி ஏமாந்தோம்

தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டுமின்றி, கேரளாவைச் சேர்ந்த பலரும் இந்நிறுவனத்தில் வேலைக் காகப் பணம் செலுத்தியுள்ளனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மனோஜ் பிபிசி தமிழ் ஊடகத்துக்கு அளித் துள்ள பேட்டியில், "பல இடங்களிலும் விளம்பரம் செய்திருந்தனர். தினசரி நாளிதழ்களில்கூட விளம்பரங்கள் வந்திருந்தன. அதை நம்பித்தான் நான் உட்பட பலரும் பணம் கட்டி ஏமாந்துள்ேளாம்.

"சிங்­கப்­பூ­ரில் வேலை தரு­வ­தா­கக் கடி­தம் கொடு­த்தார்­கள். நுழைவு அட்­டைக்­கான கடி­தம் கொடுத்­தார்­கள். ஆனால், இவை அனைத்­துமே ேபாலி என இப்­போது­தான் எங்­களுக்­குத் தெரியவந்­துள்­ளது. இங்கு நூற்­றுக்­கும் ேமற்­பட்­டோர் வந்­துள்­ளோம். இன்­னும் எத்­தனை பேர் உள்­ள­னர் எனத் தெரி­ய­வில்லை. நிறுவனர் ராமமூர்த்தி, மேலாளர் மோகன், அலுவலகப் பணியாளர்கள் சரண்யா, ஜோதி ஆகியோர்தான் இதில் சம்மந்தப் பட்டுள்ளனர். மூன்று லட்சம் வரை பலரும் கொடுத்துள்ளனர்," என்று கூறினார்.