சென்னை விமான நிலைய முனையம் விரைவில் திறப்பு

சென்னை விமான நிலைய முனையம் விரைவில் திறப்பு

1 mins read
bf8f57f6-94db-4c96-9182-ab252d8bc029
திமிங்கில வடிவிலான 'சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர்' என்ற பெலுகா சரக்கு விமானம், முதன்முதலாக சென்னை விமான நிலையத் துக்கு வந்தது. 47,000 கிலோ வரை சரக்கு ஏற்றிச் செல்லக்கூடிய இவ்விமானம், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் இருந்து சென்னையில் எரிபொருள் நிரப்பிவிட்டு தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது. படம்: தமிழக ஊடகம் -

வேலூர்: சென்னை விமான நிலை­யத்­தின் புதிய முனை­யம் விரை­வில் திறக்­கப்­படும் என மத்­திய சாலை, விமா­னப் போக்­கு­வ­ரத்­துத் துறை இணை அமைச்­சர் வி.கே.சிங் தெரி­வித்­துள்­ளார்.

வேலூ­ரில் நடை­பெற்ற பாஜக ஆேலாச­னைக் கூட்­டத்­தில் பங்­கேற்ற பின்­னர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், "சென்னை விமானநிலை­யத்­தில் புதிய விமான நிலை­யம் அமைக்­கும் பணி­கள் விரை­வில் முடிக்­கப்­பட்டு, விமா­னப் பயணச் சேவை­கள் தொடங்­கப்­படும்," என்­றார்.

"சென்­னை­யில் புதி­தாக பசுமை விமா­ன­நி­லை­யம் அமைக்­கப்­பட இருக்கிறது. இதற்­காக இரு இடங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு உள்ளன.

"நாடு முழு­வ­தும் அடுத்த மூன்றாண்­டு­களில் 80 புதிய விமான நிலை­யங்­களை அமைப்­பதற்­கான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்றன.

"வேலூ­ரில் விரி­வாக்­கம் செய்­யப்­பட்டு வரும் விமான நிலை­யப் பணி­கள் முடி­வ­டைந்து, விரை­வில் போக்­கு­வ­ரத்து தொடங்­கும்," என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.