ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது பருவமழை

ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; தமிழ்நாட்டில் தீவிரமடைகிறது பருவமழை

1 mins read
f656adc8-85c1-4929-9a07-faa3acc613f0
தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாகநீலகிரி மாவட்டம் மங்குளி பகுதியில் தரைப்பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது வெள்ளத்தில் சிக்கியவரை அப்பகுதி மக்கள் மீட்டனர்.படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தின் கோவை, நீல­கிரி உள்­ளிட்ட சில மாவட்­டங்­களில் பருவமழை மெல்ல தீவி­ர­ம­டைந்து வரு­கிறது.

அடுத்து வரும் தினங்­களில் தேனி, திண்­டுக்­கல், தென்­காசி, கன்­னி­யா­கு­மரி, திரு­நெல்­வேலி ஆகிய ஐந்து மாவட்­டங்­க­ளி­லும் கன­மழை பெய்­யக்­கூ­டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

நேற்று முன்­தி­னம் நீல­கிரி, கூடலூர் பகு­தி­களில் 15 சென்­டி­மீ­ட்­டர் மழை கொட்­டித் தீர்த்­தது.

நீல­கிரி மாவட்­டத்­தில், வழக்­க­மாக ஜூன் மாதத் தொடக்­கத்­தி­லேயே தென்­மேற்­குப் பரு­வ­மழை தொடங்­கி­வி­டும் என்­றும் இம்­முறை அதில் தாம­தம் ஏற்­பட்­டுள்­ளது என்றும் வானிலை மையம் தெரி­வித்­தது.

கூட­லூர், பந்­த­லூர், ஊட்டி, குந்தா ஆகிய பகு­தி­களில் நேற்று முன்­தி­னம் கன­மழை பெய்த நிலை­யில், நேற்று பலத்த காற்­று­டன் தொடர் சாரல் மழை பெய்­த­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. நீல­கிரி­யில் உள்ள நீர்­நி­லை­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

சில பகு­தி­களை வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. மங்­குளி பகு­தி­யில் தரைப்­பா­லம் ஒன்று வெள்ள நீரில் அடித்­துச் செல்­லப்­பட்­டது. கூட­லூர், பந்­த­லூர் பகு­தி­களில் 10 ஆயி­ரம் பேர் தங்­கு­வ­தற்கு ஏற்ப 450 நிவா­ரண முகாம்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­கி­டையே காவி­ரி­யில் வெள்ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டுள்­ள­தால் கரை­யோ­ரப் பகு­தி­களில் வசிப்­போர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர். கர்­நாடக அணை­களில் இருந்து தண்­ணீர் திறந்­து­வி­டப்பட்­ட­தால் மேட்­டூர் அணைக்கு நீர்­வ­ரத்து அதி­க­ரித்­துள்­ளது. அணை­யின் நீர்­மட்­டம் ஒரே நாளில் ஐந்து அடி அதி­க­ரித்­தது. அணை கட்­டப்­பட்ட பிறகு 68வது முறை­யாக அதன் நீர்­மட்­டம் நூறு அடியை எட்­டி­யுள்­ளது.