அதிமுக வங்கிக் கணக்குகளைக் கைப்பற்ற கடும் போட்டி

அதிமுக வங்கிக் கணக்குகளைக் கைப்பற்ற கடும் போட்டி

2 mins read
fba1a65a-93b9-481a-ac4c-6c0eb94eadd7
-

சென்னை: அதி­மு­க­ பொரு­ளா­ளர் பத­வி­யில் தாம் இன்­னும் நீடிப்­ப­தா­க­வும் கட்­சி­யின் வங்­கிக் கணக்கு­களை வேறு யாரும் கையாள அனு­மதிக்­கக்கூடாது என்றும் குறிப்பிட்டு, ஓ.பன்­னீர்­செல்­வம் அதி­மு­க­வின் கணக்­கு­கள் உள்ள வங்­கிக் கிளை­யின் மேலா­ள­ருக்கு கடி­தம் அனுப்பி உள்­ளார்.

அதி­மு­கவைக் கைப்­பற்­று­வ­தில் முன்­னாள் முதல்­வர்­கள் எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வம் ஆகிய இரு­வ­ருக்­கும் இடையே கடும் போட்­டி நிலவுகிறது.

இதை­ய­டுத்து அதி­முக தலைமை­ய­கத்­துக்கு சீல் வைக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் கடந்த 11ஆம் தேதி நடை­பெற்ற அதி­முக பொதுக்­குழு கூட்­டத்­தில் அக்­கட்­சி­யின் புதிய பொரு­ளா­ள­ராக திண்­டுக்­கல் சீனி­வா­சன் நிய­மிக்­கப்­பட்­டார். அதி­முக வங்­கிக் கணக்கு­களை தங்­கள் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வர இரு தரப்­பி­ன­ரும் முயன்று வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், அதி­மு­க­வின் வங்­கிக் கணக்­கு­களை திண்­டுக்­கல் சீனி­வா­சனோ அல்­லது அவ­ரால் நிய­மிக்­கப்­படும் வேறு ஒரு­வரோ கையாள அனு­ம­திக்­கக்­கூ­டாது என்­றும் கட்­சிப் பொரு­ளா­ளர் என்ற வகை­யில் தாம் மட்­டுமே அவற்­றைக் கையாள முடி­யும் என்­றும் ஓ.பன்­னீர்­செல்­வம் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக வங்கி மேலா­ள­ருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.

தேர்­தல் ஆணை­யத்­தில் உள்ள ஆவ­ணங்­க­ளின்­படி அதி­மு­க­வின் பொரு­ளா­ளர், ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஆகிய பொறுப்­பு­களில் தாம் இன்­னும் நீடிப்­ப­தாக அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார். இதே­போல் எடப்­பாடி பழனி­சாமி தரப்­பும் வங்கி மேலா­ள­ருக்கு கடி­தம் அனுப்பி இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது. எனவே, வீண் சர்ச்­சை­களைத் தவிர்க்­கும்­வி­த­மாக அதி­முக வங்­கிக் கணக்­கு­கள் முடக்­கப்­படும் வாய்ப்­புள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதற்­கி­டையே வரு­வாய்த்­து­றை­யி­ன­ரால் சீல் வைக்­கப்­பட்­டுள்ள அதி­முக தலைமை அலு­வ­ல­கத்தை தங்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கக் கோரி இரு தரப்­பி­ன­ரும் நீதி­மன்­றத்தை அணு­கி­யுள்­ள­னர்.

இது தொடர்­பான மனுக்­கள்மீது, தலைமை நீதி­ப­தி­யின் ஒப்­பு­த­லுக்­குப் பிறகே விசா­ரணை நடை­பெ­றும் என உயர் நீதி­மன்­றம் அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தில் இருந்து முக்­கிய ஆவ­ணங்­களை பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­கள் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­தாக காவல்­து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் வரும் 17ஆம் தேதி அதி­முக எம்­எல்­ஏக்­கள் கூட்­டம் நடை­பெ­று­கி­றது.