முரட்டு மீசையுடன் வந்த காவலர்; கத்தரிக்கச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதி

முரட்டு மீசையுடன் வந்த காவலர்; கத்தரிக்கச் சொல்லி உத்தரவிட்ட நீதிபதி

1 mins read
a6904096-d780-4367-9da7-4dca4b693ac2
முரட்டு மீசையுடனும் அதைக் கத்தரித்த பிறகும் காவலர்ராஜேஷ் கண்ணா. படங்கள்: ஊடகம் -

நீல­கிரி: பெரிய மீசை வைத்­து இருந்­த­தற்­காக காவ­லர் ஒரு­வரை நீதி­பதி கண்­டித்­தார். மேலும், உட­ன­டி­யாக மீசையைச் சிறி­தாக கத்­த­ரிக்க வேண்­டும் என்­றும் உத்­த­ர­விட்­டார்.

நேற்று முன்­தி­னம் நீல­கிரி மாவட்ட நீதி­மன்­றத்­தில் நடை­பெற்ற வழக்கு தொடர்­பாக அங்கு வந்­தி­ருந்­தார் காவ­லர் ராஜேஷ் கண்ணா. அவர் அங்­குள்ள அம்­ப­ல­மூலா காவல் நிலை­யத்­தில் பணி­யாற்­று­கி­றார்.

வழக்கு விசா­ர­ணை­யின்­போது நீதி­ப­திக்கு மரி­யாதை தெரி­விக்­கும்­வி­த­மாக வணக்கம் தெரிவித்த ராஜேஷ் கண்­ணா­வின் பெரிய, முரட்டு மீசை­யைக் கண்ட நீதி­பதி கோப­மா­னார். இதை­ய­டுத்து ராஜேஷ் கண்ணா தனது முரட்டு மீசையைக் கத்­த­ரித்து மற்றவர்­களைப் போல் சிறிய மீசை­யாக வைத்­துக்­கொள்ள வேண்­டும் என்­றார்.

மேலும், மீசை­யைக் கத்­த­ரித்த பின்­னர் தம்­மி­டம் வந்து அதைக் காண்­பிக்க வேண்­டும் என­வும் உத்­த­ர­விட ராஜேஷ் கண்­ணா­வும் அவ்­வாறே செய்­தார்.

எனி­னும், நீதி­மன்­றத்­தில் அனை­வ­ரது முன்­னி­லை­யில் நீதி­பதி தம்­மி­டம் நடந்­து­கொண்ட விதம் குறித்து உயர் அதி­கா­ரி­க­ளி­டம் அவர் முறை­யிட்­டுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

காவல்­து­றை­யில் பணி­யாற்­று­வோர் தாடி வளர்க்­கத்­தான் பல கட்­டுப்­பா­டு­கள் உள்ளன என்றும் எவ்­வ­ளவு பெரிய மீசை வேண்­டு­மா­னா­லும் வைத்­துக்கொள்ள அனு­மதி உண்டு என்­றும் காவலர்­கள் தரப்­பில் சுட்­டிக்­காட்­டப்­ப­டுகிறது.