மூவாயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டம்

மூவாயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டம்

1 mins read
55c229a9-7d8e-4846-82bb-b7714e7a75aa
-

ஒசூர்: மூவா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட சிறு, குறு ­தொ­ழில் நிறு­வ­னங்­கள் நேற்று முன்­தி­னம் ஒசூ­ரில் கடை­யடைப்பு போராட்­டத்­தில் ஈடு­பட்­டன.

பெரிய நிறு­வ­னங்­க­ளுக்கு உற்­பத்தி செய்து தரக்­கூ­டிய பொருள்­களுக்கு உரிய தொகை வழங்க வலி­யு­றுத்தி இந்­தப் போராட்­டம் நடை­பெற்­றது.

அந்­நி­று­வ­னங்­க­ளின் உரி­மை­யா­ளர்­கள், தொழி­லா­ளர்­கள் போராட்­டத்­தில் பங்­கேற்­ற­னர். ஒசூர் தளி சாலை மாந­க­ராட்­சிப் பூங்கா பகுதி­யில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் ஒன்­று­கூடி தங்­க­ளது கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி முழக்­கங்­கள் எழுப்­பி­னர். மேலும், கோரிக்­கை­கள் அடங்­கிய பதா­கை­க­ளை­யும் கையில் ஏந்­தி­யி­ருந்­த­னர்.

மத்­திய, மாநில அர­சு­கள் தங்­கள் கோரிக்­கை­கள் தொடர்­பாக உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என ஒசூர் சிறு, குறுந்­தொ­ழில் சங்­கத் தலை­வர் வேல்­முரு­கன் வலி­யு­றுத்­தி­னார்.

இது முதற்­கட்­ட­மாக நடந்­துள்ள கவன ஈர்ப்புப் போராட்­டம் மட்­டுமே என்­றும் கோரிக்­கை­கள் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டால் அடுத்­த­கட்ட போராட்­டங்­கள் நடத்­தப்­படும் என்­றும் அச்­சங்க நிர்­வா­கி­கள் எச்­ச­ரித்­த­னர்.