ஏரிக்குள் விழுந்த லாரி; மூவர் உயிர் தப்பினர்

ஏரிக்குள் விழுந்த லாரி; மூவர் உயிர் தப்பினர்

1 mins read
7fef36f7-f40a-4a7c-ace1-1b73110915a3
-

ஈரோடு: ஏரிக்குள் லாரி விழுந்த விபத்தில் (படம்) அதில் இருந்த ஓட்டுநர் உட்பட மூன்று பேர் உயிர் பிழைத்தனர். இந்தச் சம்பவம் ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் நிகழ்ந்துள்ளது.

நேற்று அதிகாலை 3.30 மணியளவில் செங்கல் ஏற்றி வந்த அந்த லாரி தாரமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஆப்பக்கூடல் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, தாறுமாறாக ஓடி, இறிதியில் கூத்தம்பூண்டி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

லாரி ஓட்­டு­நர் சுப்­பி­ர­மணி என்­ப­வர் எப்­ப­டியோ சிர­மப்­பட்டு லாரி­யில் இருந்து வெளி­யேறி கரை சேர்ந்­தார். எனி­னும் அவ­ரு­டன் வந்த செங்­கல் சூலைத் தொழி­லா­ளர்­கள் இரு­வர் லாரிக்­குள் சிக்­கிக்­கொண்­ட­னர்.

விபத்து குறித்து தக­வ­ல­றிந்த அப்­ப­குதி மக்­கள் விரைந்து வந்து, அங்­குள்ள பட­கோட்டி ஒரு­வ­ரது உத­வி­யு­டன் இரு தொழி­லா­ளர்­களை­யும் மீட்­ட­னர்.