அதிமுக: களையெடுப்பு பணியில் பழனிசாமி

அதிமுக: களையெடுப்பு பணியில் பழனிசாமி

2 mins read
cbef1f5d-931f-422a-b04c-9dcc8ee3bdae
பழனிசாமி. படம்: ஊடகம் -

ஓபிஎஸ் அணியின் ஆறு மாவட்டச் செயலாளர்கள் நீக்கம்

சென்னை: அதி­மு­க­வில் உள்ள ஓ.பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­க­ளைக் களை­யெ­டுக்­கும் நட­வ­டிக்­கையை எடப்­பாடி பழ­னி­சாமி தீவிரப்­ப­டுத்தி உள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

முதற்­கட்­ட­மாக, பன்­னீர்­செல்­வத்­துக்கு ஆத­ர­வாகச் செயல்பட்ட ஆறு மாவட்­டச் செய­லா­ளர்­களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்­பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதி­மு­க­வில் மொத்­தம் 75 மாவட்­டச் செய­லா­ளர்­கள் உள்­ள­னர். இவர்­களில் ஆறு பேர் ஓ.பன்­னீர்­செல்­வத்­தின் ஆத­ர­வா­ளர்­களாக இருந்தனர்.

ஓபி­எஸ், இபி­எஸ் தரப்­பு­க­ளுக்கு இடையே நடை­பெற்று வந்த மறை­முக மோதல், அண்­மை­யில் கூடிய பொதுக்­கு­ழுக் கூட்­டத்­தின்­போது பெரி­தாக வெடித்­தது. அதன் எதி­ரொ­லி­யாக கட்­சி­யின் அடிப்­படை உறுப்­பி­னர் பொறுப்­பில் இருந்து பன்­னீர்­செல்­வம் நீக்­கப்­பட்­டுள்­ளார்.

அதை­ய­டுத்து, அவ­ருக்கு ஆத­ர­வாக உள்ள ஆறு மாவட்­டச் செய­லா­ளர்­க­ளின் பத­வி­யைப் பறிப்­பது என எடப்­பாடி பழ­னி­சாமி தரப்பு முடிவு செய்­தது. எனி­னும், இந்த ஆறு பேரும் கட்­சியை விட்டு நீக்­கப்­பட மாட்­டார்­கள் என்­றும் பழ­னி­சா­மிக்கு ஆத­ரவு தெரி­விக்­கும் பட்­சத்­தில், கட்­சிப் பொறுப்­பில் நீடிக்க வாய்ப்­புள்­ள­தா­க­வும் கூறப்பட்டது.

இதற்கிடையே, பன்­னீர்­செல்­வத்­தின் ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்த முன்­னாள் அமைச்­சர்­கள் நத்­தம் விஸ்­வ­நா­த­னும் தங்­க­ம­ணி­யும் அதி­முக துணை பொதுச்­செ­ய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அதே­போல் ஓபி­எஸ் பக்­கம் உள்ள கட்சி நிர்­வா­கி­கள் அனை­வரை­யும் தங்­கள் பக்­கம் இழுக்க எடப்­பாடி தரப்பு முயற்சி மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் ஒத்­து­வ­ரா­த­வர்­கள் கட்­சியை விட்டே நீக்­கப்­ப­டு­வார்­கள் என்­றும் அதி­முக வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்­நி­லை­யில், அதி­மு­க­வில் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக தாம் இன்­னும் பொறுப்­பில் நீடிப்­ப­தாக தேர்­தல் ஆணை­யத்­துக்கு பன்­னீர்­செல்­வம் கடி­தம் அனுப்பி உள்­ளார்.

மேலும், பொதுக்­குழு தொடர்­பான வழக்கு நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் இருக்­கும்­போது, பழ­னி­சாமி புதிய நிர்­வா­கி­களை நிய­மித்­தி­ருப்­பது செல்­லாது என்று குறிப்­பிட்­டுள்­ளார். எனவே, புதிய நிய­ம­னங்­களை ஏற்­கக்­கூ­டாது என்று தமது கடி­தத்­தில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தைக் கைப்­பற்ற இரு­தரப்­பி­ன­ரும் பல்­வேறு முயற்­சிகளை மேற்­கொண்­டுள்ளனர். தலை­மைக் கழ­கத்தை தங்­கள்­வ­சம் வைத்­தி­ருந்­தால் மட்­டுமே தொண்­டர்­கள் ஆத­ரவு நீடிக்­கும் என இரு­த­ரப்­பி­ன­ரும் கரு­து­வ­தா­கத் தெரி­கிறது.

முன்­ன­தாக, இரு­வ­ரது ஆத­ர­வா­ளர்­களும் நேருக்­கு­நேர் மோதிக்­கொண்­டதை அடுத்து, அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­துக்கு வரு­வாய்த்­துறை அதி­கா­ரி­கள் சீல் வைத்­துள்­ள­னர்.