கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா ஓட்டுநரிடம் தீவிர விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதா ஓட்டுநரிடம் தீவிர விசாரணை

1 mins read
2c14dea0-6d8c-49bd-8115-1b4094556e4e
-

கோவை: கோட­நாடு கொலை, கொள்ளை சம்­ப­வங்­கள் தொடர்­பாக ஜெய­ல­லி­தா­வின் முன்­னாள் கார் ஓட்­டு­ந­ராக இருந்த குண­சே­க­ர­னி­டம் காவல்­து­றை­யின் தனிப்­ப­டை­யி­னர் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

முன்­னாள் முதல்­வர் ஜெய­ல­லி­தா­வின் மறைவை அடுத்து, அவ­ருக்­குச் சொந்­த­மான கோட­நாடு பங்­க­ளா­வில் சிலர் புகுந்து அங்­குள்ள பல பொருள்­க­ளைக் கொள்­ளை­ய­டித்­துச் சென்­ற­னர். மேலும், அந்த பங்­க­ளா­வின் காவ­லாளி கொல்­லப்­பட்­டார்.

பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­திய இந்­தச் சம்­ப­வம் குறித்து காவல்­துறை தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இந்­நி­லை­யில், இந்த வழக்கு தொடர்­பாக, இது­வரை விசா­ரிக்­கப்­ப­டாத பல­ரி­டம் தனிப்­ப­டை­யி­னர் தற்­போது திடீர் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

அந்த வகை­யில் கோவை­யைச் சேர்ந்த தொழி­ல­தி­பர் ஆறு­மு­க­சாமி, அவ­ரது மகன் செந்­தில்­கு­மார், உத­வி­யா­ளர் பழ­னி­சாமி, புது­வை­யைச் சேர்ந்த சொகுசு விடுதி உரி­மை­யா­ளர் நவீன் பாலாஜி ஆகி­யோ­ரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டுள்­ளது.

மேலும், அதி­முக முன்­னாள் எம்­எல்ஏ ஆறுக்­குட்­டி­யி­ட­மும் மீண்­டும் விசா­ரணை நடத்­திய தனிப்­ப­டை­யி­னர், திடீர் திருப்­ப­மாக ஜெய­ல­லி­தா­வின் கார் ஓட்­டு­நர் குண­சே­க­ரி­டம் நேற்று விசா­ரணை நடத்­தி­னர்.

இவர் சிறிது காலம் மட்­டுமே போயஸ் தோட்­டத்­தில் உள்ள ஜெய­ல­லி­தா­வின் வீட்­டில் ஓட்­டு­ந­ராக வேலை பார்த்­துள்­ளார். மேலும் அதி­முக ஆட்­சிக்­கா­லத்­தில் அதன் தலைமை அலு­வ­ல­கத்­துக்­கா­க­வும் கார் ஓட்­டி­யுள்­ளார்.

புதிய விசாரணைகளால் இவ்வழக்கு சூடு பிடித்துள்ளது.