நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் தீர்ப்பு

நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் தீர்ப்பு

1 mins read
e076ceae-31c8-4c6e-985d-2d3d1455c0b4
-

சென்னை: நடி­கர் விஜய் இறக்­கு­மதி செய்த சொகுசு கார் தொடர்­பான வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதி­மன்ற நீதி­பதி சுரேஷ் குமார் நேற்று முடித்­து­வைத்து தீர்ப்­ப­ளித்­தார்.

"தான் இறக்­கு­மதி செய்த சொகுசு காருக்கு 2019 ஜன­வரி மாதத்­துக்கு முன்­னர் முழு நுழைவு வரி­யை­யும் விஜய் தரப்­பில் செலுத் தப்­பட்­டி­ருந்­தால் அவ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கக்­கூ­டாது. ஆனால், 2019 ஜன­வரி மாதத்­துக்­குப் பின்­ன­ரும் நுழைவு வரியை முழு­மை­யா­கச் செலுத்­தா­மல் இருந்­தி­ருந்­தால் அப­ரா­தம் விதிக்­க­லாம்," என வணிக வரித்­து­றைக்கு அவர் உத்­த­ர­விட்டுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்த 'பிஎம்­ட­பிள்யூ எக்ஸ் 5' காருக்கு நுழைவு வரி செலுத்தும்படி மாநில அர­சின் வணிக வரித்­துறை உத்­த­ர­விட்­டது. இதை எதிர்த்து விஜய் தரப்­பில் தொட­ரப்­பட்ட வழக்­கில், நுழைவு வரி வசூ­லிக்க மாநி­லங்­களுக்கு அதி­கா­ரம் உள்­ளதாக உயர் நீதி­மன்­றம் உத்­த­ரவு பிறப்­பித்­தது. காருக்கு 7 லட்­சத்து 98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்­தப்­பட்ட நிலை­யில், இடைப்­பட்ட காலத்­திற்கு 30 லட்­சத்து 23,000 ரூபாய் அப­ரா­த­மாகச் செலுத்தவேண்­டு­மென வணிக வரித்­துறை உத்­த­ர­விட்­டது. இதனை எதிர்த்து விஜய் இவ் வழக்கைத் தொடர்ந்தார்.