சென்னை: அதிமுக தற்போது ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணி களாகச் செயல்பட்டு வருகிறது.
பன்னீர்செல்வத்தின் இரு மகன் கள், அவரது ஆதரவாளர்கள் என 18 பேரை எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இருந்து நேற்று முன்தினம் மாலை நீக்கினார்.
இதற்குப் பதிலடியாக இபிஎஸ் உள்ளிட்ட 22 நிர்வாகிகளைத் தான் கட்சியை விட்டு நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்கிய நிலையில், அவரது மகன்கள் ரவீந்திரநாத் எம்பி, ஜெய பிரதீப் ஆகியோரை நேற்று முன்தினம் மாலை கட்சியிலிருந்து பொதுக் குழுச் செயலர் பழனிச்சாமி நீக்கியதாக அறிவித்தார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள் உள்பட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர் நீக்கப்பட்டனர்.
கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்பட்டதாலும் கட்சி யின் ஒழுங்கு சீர்குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவதாக இபிஎஸ் தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஓபிஎஸ், பழனிச்சாமியை தான் நீக்குவதாகக் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் முனு சாமி, சீனிவாசன், செங்கோட்டை யன், விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, உதயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, சண்முகம், மணியன், செல்லூர் ராஜு உட்பட 22 பேரை நீக்குவதாகவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, ''கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஒரு இடத்தில்தான் ஓ.பி.ரவீந்திரநாத் மூலம் வெற்றி கிடைத்தது. அவரை கட்சியில் இருந்து நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. இபிஎஸ் அறிவிக்கும் எந்த அறிவிப்பும் அதிமுகவின் சட்டப்படி செல்லாது," என கண்டனம் தெரிவித்தார்.
"நான் இன்றும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகத் தொடர்கிறேன். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடர்பாக தேர்தல் ஆணை யத்துக்குத் தெரிவிக்கப்பட்டு, ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இப்பதவிகளுக்கான காலம் ஐந்து ஆண்டுகள் வரை உள்ளது," என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.

