நூறாயிரம் அரிசிக்கடைகள், ஆலைகள் மூடப்பட்டன

நூறாயிரம் அரிசிக்கடைகள், ஆலைகள் மூடப்பட்டன

2 mins read
957410e5-83d9-4a65-9fc9-d9cca74e08a0
-

அரிசிக்கு 5% ஜிஎஸ்டி விதிக்க எதிர்ப்பு; மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம்

சென்னை: சென்னை, தர்­ம­புரி உட்­பட மாநி­லம் முழு­வ­தும் சுமார் நூறா­யி­ரம் அரி­சிக் கடை­களும் ஆலை­களும் நேற்று மூடப்­பட்­டன. இத­னால் பொதுமக்­கள் அரிசி வாங்க முடி­யா­மல் தவிப்­புக்கு ஆளாகி­னர்.

அரி­சிக்கு ஐந்து விழுக்­காடு சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு வியாபா­ரி­கள் தரப்­பில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

இந்­நி­லை­யில், வரி விதிப்­புக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வித­மாக தமி­ழ­கம் முழு­வ­தும் அரிசி ஆலை­கள், அரி­சிக் கடை­கள் ஒரு­நாள் மூடப்­படும் என அவற்­றின் உரிமை­யா­ளர்­கள் அறி­வித்­தி­ருந்­த­னர். அதன்­படி, நேற்று மாநி­லம் தழு­விய அள­வில் சுமார் நூறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட அரி­சிக் கடை­கள் அடைக்­கப்­பட்­டன.

சென்­னை­யில் மட்­டும் ஆயி­ரம் அரி­சிக் கடை­கள் மூடப்­பட்­டி­ருந்­த­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­தன.

ஐந்து விழுக்­காடு அள­வி­லான ஜிஎஸ்டி வரி­யால் தங்­க­ளுக்­குப் பெரி­தும் பாதிப்பு ஏற்­படும் என்று வியா­பா­ரி­கள் தரப்பு கூறு­கிறது. மேலும், அரிசி விலை கணி­ச­மாக உய­ரும் அபா­யம் உள்­ளது என்­றும் சுட்­டிக்­காட்டி உள்­ள­னர்.

வரி விதிப்­பின் கார­ணமாக தமிழகத்­தில் ஒரு மூட்டை அரிசி­யின் விலை நூறு ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது என்­றும் ஒரு கிலோ அரி­சி­யின் விலை 3 முதல் 5 ரூபாய் வரை அதி­க­ரித்­துள்­ளது என்­றும் வியா­பா­ரி­கள் கூறி­யுள்­ள­னர்.

"இது கவ­லைக்­கு­ரிய விஷ­யம் என்­ப­தால் எங்­க­ளு­டைய எதிர்ப்பை ஒரு­நாள் கடை­ய­டைப்­பின் மூலம் மத்­திய, மாநில அர­சு­க­ளுக்­குப் புலப்­ப­டுத்தி உள்­ளோம்.

சென்­னை­யில் உள்ள அனைத்து சந்­தை­க­ளி­லும் இயங்கி வந்த அரி­சிக் கடை­கள் மூடப்­பட்­டன. திரு­வல்­லிக்­கேணி, புர­சை­வாக்­கம், எழும்­பூர், வட­ப­ழனி, வண்­ணா­ரப்­பேட்டை, மாத­வ­ரம், செங்­குன்­றம் பகு­தி­களில் உள்ள சுமார் ஆயிரம் அரிசி கடை­கள் நேற்று அடைக்கப்­பட்டு இருந்­தன," என்று வியா­பா­ரி­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டது.

வியா­பா­ரி­க­ளின் இந்­தத் திடீர் போராட்­டம் கார­ண­மாக அரிசி வாங்க முடி­யா­மல் பொது­மக்­கள் தவிப்­புக்கு ஆளா­கி­னர்.

ஜிஎஸ்டி வரி­வி­திப்­பால் அரிசி உற்­பத்தி, விற்­பனை தொழில் பெரு­மளவு பாதிக்­கப்­படும் என்­றும் மொத்த, சில்­லறை விற்­பனை செய்­யும் அரிசி வியா­பா­ரி­கள் நலிவடைந்து வேறு தொழி­லுக்குச் செல்ல நேரிடும் என்­றும் வியா­பா­ரி­கள் தரப்­பில் சுட்டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

மேலும், வெளி­மா­நி­லத்­தில் இருந்து வரும் நெல், அரிசி, கோதுமை, பருப்பு ஆகி­ய­வற்­றின் கொள்­மு­த­லி­லும் ஜிஎஸ்டி முறை வரிவிதிப்பு கடும் பாதிப்புகளை ஏற்­ப­டுத்­தும் என்­றும் வியா­பா­ரி­கள் கூறு­கின்­ற­னர். எனவே மத்­திய, மாநில அர­சு­கள் ஜிஎஸ்டி வரி விதிப்பை மறு­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டும் என்­பதே தங்களது கோரிக்கை என்­கி­றார்­கள் வியாபாரிகள்.