விழுப்புரத்தில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொற்றவைச் சிற்பம் கண்டெடுப்பு

2 mins read
59ed12a1-df2a-468e-ad42-51533c63f5b3
விழுப்புரம் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக் கப்பட்டுள்ள துர்க்கை என வணங்கப் படும் கொற்றவைச் சிற்பம். படம்: தமிழக ஊடகம் -

விழுப்­பு­ரம்: சுமார் 1,200 ஆண்­டுகள் பழமை வாய்ந்த கொற்­றவை சிற்­பம் ஒன்று விழுப்­பு­ரம் அருகே கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கீழ­டி­யைப் போன்று தமி­ழகத்தின் வேறு சில பகு­தி­க­ளி­லும் தொல்­லி­யல்­துறை சார்­பில் தீவிர அக­ழாய்­வுப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

அந்த வகை­யில், விழுப்புரத்தை அடுத்­துள்ள நேமூ­ரில் வரலாறு, பண்பாட்­டுப் பேரவை ஒருங்கிணைப்­பாளர் செங்­குட்டுவன் தலை­மை­யி­லான குழு­வி­னர் கள ஆய்­வில் ஈடு­பட்டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், ஆய்வு நடக்­கும் பகு­தி­யில் உள்ள ஏரிக்­க­ரை­யில் துர்க்கை என வணங்­கப்­பட்டு வரும் கொற்­றவை சிற்­பம் இருப்பது கண்டறி­யப்­பட்­டது.

இந்­தச் சிற்­பம் சற்­றேறக்குறைய கிபி எட்டு அல்­லது ஒன்­ப­தாம் நுாற்றாண்­டைச் சேர்ந்­த­தாக இருக்­கும் என்­கிறது அக­ழாய்­வுக்­குழு.

மொத்­தம் ஆறு அடி உய­ரம் உள்ள பல­கைக் கல்­லில் அச்­சிற்­பம் வடிக்­கப்­பட்­டுள்­ளது. இது பல்­ல­வர் காலத்­தைச் சேர்ந்த சிலை­யாக இருக்­கக்­கூ­டும் என்­றும் அக்­குழு தெரி­வித்­துள்­ளது.

"எட்டு கரங்­க­ளு­டன் உள்ள கொற்­றவை தக்க ஆயு­தங்­களை ஏந்தி, எரு­மைத் தலை­யின் மீது நிற்­கும்­படி சிலை அமைக்­கப்­பட்டுள்­ளது. இடது கரத்­தின் கீழே மான் காட்­டப்­பட்டு இருக்­கிறது. கால்­க­ளின் இரண்டு பக்­கங்­க­ளி­லும் வணங்கி பூசை செய்­யும் நிலை­யில் அடி­ய­வர் இரு­வ­ரது உரு­வங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

"கொற்­றவை சிற்­பத்­தின் அரு­கி­லேயே ஒன்­றன்கீழ் ஒன்­றாக இருக்­கும் ஆறு முகங்­க­ளைக் கொண்ட சிற்­பம் தனியே காணப்­ப­டுகிறது. இது முரு­க­னைக் குறிப்­ப­தா­கும். இந்த சிற்­ப­மும் 1,200 ஆண்­டு­கள் பழமை வாய்ந்­த­தா­கும்," என அக­ழாய்­வுப் பணி­யில் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரான செங்­குட்­டு­வன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, திரு­வண்­ணா­மலை மாவட்­டம் தண்­ட­ராம்­பட்டு அருகே மல­மஞ்­ச­னுார் வீர­பத்­திர சுவாமி கோவி­லில் இருந்த 200 ஆண்­டு­கள் பழமை வாய்ந்த 10 ஐம்­பொன் சுவாமி சிலை­கள் மாயமாகி உள்­ளன.

இது­கு­றித்து காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.