11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

1 mins read
f39a7d69-1beb-4766-9c6b-8174a65a56ec
-

மதுரை: மேட்­டூர் அணை மீண்டும் நிரம்­பி­யதை அடுத்து 11 மாவட்டங்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

தண்­ணீர் வரத்து அதி­க­ரித்­துள்­ளதை அடுத்து மேட்­டூர் அணை நீர்­மட்­டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து நேற்று காலை 119.29 அடியை எட்­டி­யது.

அணை­யில் இருந்து தண்­ணீர் திறந்­து­வி­டப்­படும் பட்­சத்­தில் சேலம், ஈரோடு, நாமக்­கல் ஆகிய மாவட்­டங்­களில் சுமார் 45,000 ஏக்கர் பாசன வசதி பெறும் என அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கர்­நா­ட­கா­வில் உள்ள பெரும்­பா­லான அணை­கள் கன­மழை கார­ண­மாக நிரம்பி உள்­ளதை அடுத்து உபரி நீர் வெளி­யேற்றப்­ப­டு­கிறது.

இதன் கார­ண­மாக ஒகே­னக்­கல் அரு­விக்கு நீர் வரத்து ஒரு லட்­சம் கன­ அ­டியை தாண்­டி­ உள்­ளது.

ஒகே­னக்­கல் பகுதி வெள்ளக் காடாக காட்சி அளிக்­கும் நிலை­யில், நீல­கிரி மாவட்­டத்தில் பரு­வ­மழை மேலும் தீவி­ர­ம் அடைந்­துள்­ளது. அங்கு புதி­தாக இரு­பது இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.