9 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

9 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது

1 mins read
6155bf63-0310-444f-8f98-55bbb4e4c791
-

சென்னை: தமி­ழ­கத்­தில் பருவ மழை தீவி­ர­ம­டைந்து வரும் நிலை­யில், ஒன்­பது மாவட்­டங்­களில் நிலத்­தடி நீர் மட்­டம் சரிந்­துள்­ளது அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்துள்­ளது.

முந்­தைய ஆண்டு ஜூன் மாதத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில், இந்­தாண்டு ஜூன் மாதத்­தில் ஒன்­பது மாவட்­டங்­களில் நிலத்­தடி நீர் சரிந்­துள்ளதாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

காஞ்­சி­பு­ரம், விழுப்­பு­ரம், நாகப்­பட்­டி­னம், நீல­கிரி, சிவ­கங்கை, தேனி, துாத்துக்­குடி, கன்­னி­யா­கு­மரி, செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் நிலத்­தடி நீர் மட்­டம் சரிந்­துள்­ள­தாக பொதுப்­ப­ணித்­துறை வெளி­யிட்ட அறிக்கை தெரி­விக்­கிறது.

எனி­னும் மற்ற மாவட்­டங்­கள் அனைத்­தி­லும் நிலத்­தடி நீர் மட்­டம் அதி­க­ரித்­துள்­ளது நல்ல செய்­தி­யா­கும். வேலுார், தர்­ம­புரி, திருச்சி, சேலம், நாமக்­கல், ஈரோடு, திண்­டுக்­கல் ஆகிய மாவட்­டங்­களில் நீர்­மட்­டம் அதி­க­ரித்­துள்­ளது.