குரங்கு அம்மை: விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு

குரங்கு அம்மை: விமான நிலையங்களில் தொடர் கண்காணிப்பு

2 mins read
0c5e8841-a529-4311-89e5-7aa34e850695
சென்னை மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொவிட்-19 மற்றும் குரங்கு அம்மை நோய்க்கான காய்ச்சல், கொப்பளங்கள் உள்ளதா என சுகாதாரத் துறை ஊழியர் பரிசோதனை செய்கிறார். படம்: இபிஏ -

சென்னை: குரங்கு அம்மை குறித்து மக்­கள் அச்­சப்­ப­டத் தேவை­யில்லை என்­றும் விமான நிலை­யங்­களில் தொடர் கண்­கா­ணிப்பு நடை­பெற்று வரு­வ­தா­க­வும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்சா் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்ளாா்.

சென்னை விமான நிலை­யத்­தில் கொவிட்-19 மற்­றும் குரங்கு அம்மை கண்­கா­ணிப்­புப் பணி­களை அைமச் சர் நேற்று முன்தினம் ஆய்வு செய்­தார்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய அவர், "கடந்த மே மாதம் முதல் இது­வரை ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட 63 நாடுகளில் 9,647 பேருக்கு குரங்கு அம்மையின் தாக்கம் உறு­தி­யாகி உள்ள நிலை­யில், தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்துலக விமான நிலையங்­களில் கண்­கா­ணிப்பு தீவி­ரப்படுத்­தப்­பட்­டுள்­ள­து.

"விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணி­ க­ளுக்கு ெகாரோனா தொற்று மற்­றும் குரங்கு அம்மை நோய்க்­கான அறிகுறிகள் உள்­ளதா என பரி­சோ­திக்கப்பட்டு வருகிறது.

"அதிலும் குறிப்பாக, குறிப்­பிட்ட 63 நாடு­களில் இருந்து வரும் பய­ணி­களை அவர்­க­ளது முகம் அல்­லது கைகளில் ஏதா­வது கொப்­ப­ளங்­கள், காய்ச்சல் போன்ற பாதிப்பு கள் உள்ளனவா என்­பதை சோதித்து வரு­கின்­ற­னர்.

"இந்த ஜூலை மாதத்­தில் மட்­டும் விமா­னம் மூலம் வந்த 1,987 பேருக்குப் பரி­சோ­தனை நடத்­தி­ய­தில் 39 பேரு­க்கு கொவிட்-19 தொற்று உறு­தி­யா­ன­தாக அமைச்­சர் கூறினார்.

"நாட்­டில் 15 இடங்­களில் குரங்கு அம்மை நோய் கண்­டறி­யும் மையம் அமைய உள்­ள­தாக மத்­திய அரசு அறிவித்­துள்ள நிலை­யில், சென்னையி­லும் ஒரு மையத்தை அமைக்க கோரிக்கை வைக்­கப்­பட்­டுள்­ள­து," என அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­தார்.