மதுரை: திரைப்படங்களில் நடிப்ப தற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி நூற்றுக்கணக்கான பெண்களிடம் என் கணவர் அத்து மீறி நடந்து கொண்டார். அதற்கான ஆதாரங்களும் என்னிடம் உள்ளதால், என் கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நந்தினி என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை டிஜிபி அலுவலகத்தில், பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவில் மதுரை மாவட்ட புறநகர்ச் செயலாளராக உள்ள மோனேஷ் பாபு மீது விருது நகர் மாவட்டம், அருப்புக் கோட்டையைச் சேர்ந்த அவரது மனைவி நந்தினி புகார் அளித்துள்ளார்.
புகாரில், 100க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி அவர்களுக்குப் பாலியல் தொந்தரவு அளித்ததாக மோனேஷ் பாபு மீது நந்தினி குற்றம்சாட்டி உள்ளார்.
தங்கள் இருவர் இடையேயும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2020ல் திருமணம் செய்துகொண்டதாக நந்தினி குறிப்பிட்டுள்ளார்.
திருமங்கலத்தில் வசித்து வந்த நிலையில், தம்மை சினிமா இயக்குநர் என்று கூறிக்கொண்டு பல பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக அத்துமீறியதாக மோனேஷ் பாபு மீது நந்தினி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தன்னிடம் இருந்த 52 சவரன் நகையைப் பறித்துக்கொண்டது தொடர்பாக நந்தினி அளித்த புகாரில் சில மாதங்களுக்கு முன்பு மோனேஷ் பாபு கைது செய்யப்பட்டார். ஆனால், அரசியல் செல்வாக் கைப் பயன்படுத்தி அவர் வெளியே வந்துவிட்டதாக நந்தினி குறிப்பிட்டு உள்ளார்.
பல ஆடியோக்கள், காணொளி கள் ஆதாரங்களாக தன்னிடம் இருப்பதாக நந்தினி புகாரில் கூறியுள்ளார். இந்தப் புகாரை அடுத்து பாஜக நிர்வாகி மோனேஷ் பாபு விரைவில் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

