மாணவர்களின் பயத்தைப் போக்கவே 70 வயதில் நீட் தேர்வு

மாணவர்களின் பயத்தைப் போக்கவே 70 வயதில் நீட் தேர்வு

2 mins read
c8975eab-c5ba-4bc0-b569-13d018fe87c3
கோவை கற்பகம் கல்லூரியில் அமைக்கப் பட்டுள்ள நீட் தோ்வு மையத்தில் தேர்வெழுதிய முதியவா் பிரின்ஸ் மாணிக்கம்.படம்: தமிழக ஊடகம் -

கோவை: நீட் தேர்வை எதிர்­கொள் வதற்கு பயந்து, ஒரு சில மாணவ-மாண­வி­கள் மன உளைச்­சல் கார­ண­மாக தங்­க­ளது உயிரை மாய்த்­துக்­கொள்­கின்­ற­னர்.

"மாணவர்களின் நீட் தேர்வு பயத்தைப் போக்­கவே நான் இத் தேர்வை எழு­தி­னேன். மாண­வா்­கள் முத­லில் அச்­சத்தைக் களைந்து, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் உள்ள இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடத் திட்டங்களை முழு மையாகப் படித்திருந்தால் வெற்றி ­பெற்று சாதிக்­க­லாம்," என்று 70 வயது முதி­ய­வர் பிரின்ஸ் மாணிக்­கம் அறி­வு­றுத்­தி­ உள்­ளார்.

தமி­ழ­கத்­தில் 59 மையங்­களில் 142,000க்கும் மேலா­னோர் நேற்று முன்தினம் நீட் தேர்வை எழு­தி­னர். இவர்­களில் ஒரு­வ­ராக பிரின்ஸ் மாணிக்­க­மும் இத்தேர்வை எழுதி மாண­வா்­க­ளுக்கு ஊக்­கத்தையும் வியப்­பை­யும் ஏற்­ப­டுத்­தினாா்.

எம்­பி­பி­எஸ், பிடி­எஸ் போன்ற மருத்­து­வப் படிப்­பு­களில் சேர்­வ­தற் கான நுழை­வுத்­தேர்­வாக நீட் உள்­ளது. மாண­வா்­கள் அச்­சப்­படும் வகை­யில் அப்படி இத்தோ்வில் என்­ன­தான் உள்­ளது என்­ப­தைத் தெரிந்துகொள்­ளவே தேர்வை எழுதி­யதாகத் தெரி­விக்­கிறாா் கோவை விநா­ய­க­பு­ரத்­தைச் சோ்ந்த எம்.பிரின்ஸ் மாணிக்­கம்.

இள­நிலை வேளாண்மை அறி­வி­யல் பட்­டம், பிஎச்டி உள்­ளிட்ட பல்­வேறு பட்­டங்­க­ளைப் பெற்­றுள்ள இவா், பரோடா வங்­கி­யில் மேலா­ள­ரா­க­ப் பணி­யாற்றி ஓய்­வு­பெற்­றவா்.

இவ­ரைப்­போ­லவே, தஞ்­சை­யில் 68 வய­தான ராம­மூர்த்தி என்பவரும் நீட் தேர்வு எழு­தி­னார். 28 பட்­டங்­களைப் பெற்­றுள்ள இவர், 2020ல் கடை­சி­யாக வழக்­க­றி­ஞ­ருக்­கான பட்­டப்­ப­டிப்பை முடித்­துள்­ளார்.

"இளை­ஞர்­க­ளுக்கு ஒரு முன்னு­தா­ர­ண­மாக இத்­தேர்வை எழு­தி­யுள்­ளேன். பயம், கவலை, சினம் இம்மூன்­றும் நீங்­கி­னால் மாண­வர்­கள் நன்கு முன்னேறலாம்," என்று ராம­மூர்த்தி கூறி­யுள்ளார்.