தக்காளியைக் குப்பையில் கொட்டிய விவசாயிகள்

தக்காளியைக் குப்பையில் கொட்டிய விவசாயிகள்

1 mins read
5f1c1666-df8b-4c25-af4c-7798d664c76e
கிணத்துக்கடவு பகுதியில் தக்காளிகள் உரிய விலைக்கு விற்பனை ஆகாததால் அவற்றை விவசாயிகள் குப்பையில் கொட்டிச்சென்றனர்.படம்: ஊடகம் -

கோவை: தக்­கா­ளிக்கு உரிய விலை கிடைக்­கா­த­தால், கிணத்­துக்­க­டவு பகுதி விவ­சா­யி­கள் தாங்­கள் விற்­ப­னைக்கு கொண்டு வந்த தக்­கா­ளி­யைக் குப்­பை­யில் கொட்­டி­விட்­டுச் சென்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் தக்­காளி உற்­பத்­தி­யில் பெரும்­பங்கு வகிக்­கிறது கோவை மாவட்­டம்.

இங்­குள்ள கிணத்­துக்­க­டவு, பொள்­ளாச்சி போன்ற பகு­தி­களில் உள்ள 60க்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில் தக்­காளி சாகு­படி முக்­கிய விவ­சா­ய­மாக உள்­ளது.

இந்­நி­லை­யில், இந்த தக்­காளி களை கிணத்­துக்­க­டவு தின­சரி காய்­கறி சந்­தைக்கு கொண்டு சென்று விவ­சா­யி­கள் ஏலம் விட்டு வரு­கின்­ற­னர்.

இங்கு கொள்­மு­தல் செய்­யப்­படும் தக்­கா­ளி­யை கேரளா, கர்­நா­டகா, ஆந்­திரா உள்­ளிட்ட வெளி­மா­நி­லங்­க­ளுக்­கும் தமி­ழ­கத்­தின் இதர மாவட்­டங்­க­ளுக்­கும் வியா­பா­ரி­கள் அனுப்பி வைக்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், கடந்த சில மாதங்­க­ளாக 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்­காளி ரூ.1,000 வரை விற்­ப­னை­யா­னது.

தற்­போது கன­ம­ழை­யால் தக்­கா­ளி­யின் விலை கடும் வீழ்ச்சி அடைந்­துள்ள நிலை­யில், நேற்று ஒரு பெட்­டி­யின் விலை 50 ரூபாய்க்­கும் கீழ் சென்­றது.

அத்­து­டன், கிணத்­துக்­க­டவு சந்­தைக்கு தக்­கா­ளியை வாங்­கும் வியா­பா­ரி­கள் யாரும் வரா­த­தால், விற்­ப­னை­யா­கா­மல் அப்­ப­டியே கிடந்­தன. இத­னால், வருத்த மடைந்த விவ­சா­யி­கள், தாங்­கள் கொண்­டு­வந்த தக்­கா­ளி­யைக் குப்­பை­யில் கொட்­டிச்­சென்­ற­னர்.

"ஓர் ஏக்­கர் தக்­காளி நடவு செய்­வ­தற்கு ரூ.75,000 வரை செல­வா­கிறது. உரிய விலை கிடைக்­கா­த­தால் விவ­சா­யி­க­ளுக்கு பெரும் நஷ்­டம் ஏற்­பட்­டுள்­ளது. தக்­கா­ளிக்கு உரிய விலையை நிர்­ண­யம் செய்து கொள்­மு­தல் செய்ய மாநில அரசு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்," என்று விவ­சா­யி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.