சென்னை: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 4,000 மாணவ, மாணவிகளின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளதால், இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வழி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கள்ளக்குறிச்சியில் 'பிளஸ் 2' மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கல வரத்தில் முடிந்தது.
இந்தக் கலவரம் தொடர்பாக 20 சிறுவர்கள், இரு பெண்கள் உட்பட ஏறக்குறைய 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக் கட்டடம் கலவரத்தில் முற்றி லும் சீர்குலைந்து போனது.
இந்தப் பள்ளியைச் சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரு வதும் இப்போது இயலாத காரியம் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், இப்பள்ளியில் படித்த 4,000 மாணவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதையடுத்து, பள்ளி எந்த அளவுக்குச் சேதம் அடைந்துள்ளது, பள்ளிக்கூடத்தை மீண்டும் இயங்க வைப்பது எவ்வாறு என்பது குறித்து நேற்று முதல்வர் ஆலோசித்தார்.
தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்குச் செய்யப்பட உள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதனிடையே, மாணவியின் மரணம் தொடர்பாக பள்ளித் தாளாளர் ரவிக்குமார், 48, செயலாளரும் தாளாளரின் மனைவியுமான சாந்தி ரவிக்குமார், 44, பள்ளி முதல்வர் சிவசங்கரன், 57, ஆசிரியைகள் ஹரிப்பிரியா, 40, கிருத்திகா, 28, ஆகியோர் கைதாகி உள்ளனர்.
கள்ளக்குறிச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முகம்மது அலி முன்பு முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்கள் ஐவரையும் ஆகஸ்ட் 1ஆம் தேதிவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன், கலவரம் தொடர்பாக கைதான 220 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 1ஆம் ேததி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தனியார் பள்ளி சூறையாடப் பட்டதால் ரூ.50 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பள்ளிகள் சங்க மாநிலச் செயலர் நந்தகுமார் ஏற்கெனவே ெதரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாணவர்களின் பெயரில் சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டியுள்ளார்.நீதி கேட்டு போராட்டம் நடத்திய வர்கள் நீதி தவறியது சரியா என் றும் அவர் கேட்டுள்ளார்.
பெற்றோர் தரப்பில் யாருமின்றி மாணவியின் உடல் மறுகூராய்வு நேற்று தொடங்கியது.
பள்ளியைச் சூறையாடி, சேதப்படுத்திய 220 பேரை இரு கட்டங்களாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவலர்கள் அழைத்து வந்தனர். படம்: இந்து தமிழ்திசை

