தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளையராஜா, பி.டி. உஷா பதவியேற்க வராததால் ஏமாற்றம்

1 mins read
b30a739b-8a27-49d8-b2f2-492867d07db5
நியமன எம்பிக் களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இசைஞானி இளையராஜா, வீராங்கனை பி.டி.உஷாவுக்கு (இடது) பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 எம்பிக்கள் அதிபர் ராம்நாத் கோவிந்தால் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறார்கள். கலை, விளையாட்டு உள்ளிட்ட துறை களில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த நியமன எம்.பி. பதவி வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற மேலவைக்கு புதி­தா­கத் தேர்ந்­தெடுக்­கப்­பட்ட எம்­பிக்­களும் நிய­மன எம்­பிக்­களும் பத­வி­யேற்­றுக்கொண்­ட நிலையில், தமி­ழகத்­தில் இருந்து தேர்­வான நிய­மன எம்­பிக்­கள் இசையமைப்பாளர் இளை­ய­ராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா ஆகியோர் பத­வி­யேற்க வரவில்லை.

'இளை­ய­ராஜா' என அவைத் தலை­வர் வெங்­கய்யா நாயுடு கூப்­பிட்­ட­தும், அவை­யில் இருந்த அனைத்து எம்­பிக்­களும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால், இளையராஜா பதவி யேற்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இளையராஜா அமெ­ரிக்கா சென்றுள்­ள­தால் அவரால் பத­வி­யேற்க இயலவில்லை என்றும் வரும் நாள்களில் இளையராஜாவும் பி.டி.உஷாவும் பதவியேற்றுக் கொள்வார்கள் எனவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமி­ழ­கத்­தில் இருந்து தேர்­வான திமுக எம்­பிக்­கள் ராஜேஷ் குமார், கல்­யாண சுந்­த­ரம், கிரி­ரா­ஜன், அதி­முக எம்.பி. சி.வி.சண்­மு­கம், காங்­கி­ரஸ் எம்.பி. ப.சிதம்­ப­ரம் ஆகி யோரும் பத­விே­யற்­ற­வர்­களில் குறிப்­பி­டத்­தக்­க­வர்­கள்.