சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக திருமங்கலம் தொகுதி எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கு முன்பு அந்தப் பதவியில் ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து, உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் துணைச் செயலாளராகப் போளூர் தொகுதி எம்எல்ஏ அக்னி கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டிருப்பதாக அதிமுக அறிவித்துள்ளது.
இம்மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அன்றைய தினமே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளை எல்லாம் ஓபிஎஸ்சிடம் இருந்து பறித்துவிட்டார்.
இப்போது அவரது எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிபோய் உள்ளது.

