நடித்துக்கொண்டிருந்த போதே உயிரிழந்த கலைஞர்

நடித்துக்கொண்டிருந்த போதே உயிரிழந்த கலைஞர்

1 mins read
54779bfe-b0b2-4bdb-87f3-5189072fd8f4
நடனமாடி, நடித்துக்கொண்டே உயிரை விட்ட ராஜய்யன். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. படம்: ஊடகம் -

ஈரோடு: ஈரோடு மாவட்­டம், சத்­திய மங்­க­லத்தை அடுத்த குப்­பன்­துறை கிரா­மத்­தில் நாட­கத்­தில் நடித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்டு நாட­கக் கலை­ஞர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

மழை ெபய்ய வேண்டி ஊரில் 17ஆம் தேதி இரவு இரண்யா என்ற நாட­கம் நடந்து கொண்­டி­ருந்­தது. அப்­போது நார­தர் வேட­மிட்டு அதே ஊரைச் சேர்ந்த நாட­கக் கலை­ஞர் ராஜய்­யன், 62, அதி­காலை 3 மணி­ய­ள­வில் ஆடிப்­பாடி, மிக­வும் உற்­சா­க­மாக நடித்­துக்­கொண்­டி­ருந்த போது திடீ­ரென மார­டைப்பு ஏற்­பட்டு சுருண்டு விழுந்­தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக கலை­ஞர்­கள் அவரை மீட்டு சத்­தி­ய­மங்­க­லம் பகு­தி­யில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு சென்­றுள்­ள­னர். அங்கு அவ­ரைப் பரி­சோ­தனை செய்த மருத்­து­வர்­கள் அவர் ஏற்­கெனவே இறந்­து­விட்­ட­தாக தெரி­வித்­த­னர்.