பழனிசாமி வசமானது அதிமுக தலைமை அலுவலகம்

பழனிசாமி வசமானது அதிமுக தலைமை அலுவலகம்

1 mins read
0cae9951-30db-4bb6-9f39-74a58a0510c1
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டுள்ள சீல் அகற்றப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக வங்கிக் கணக்குகள், தலைமை அலுவலகம் ஆகியவை எடப்பாடி பழனிசாமி தரப்பின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.கோப்புப்படம்: தமிழக ஊடகம் -

சென்னை: அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தின் சாவியை எடப்­பாடி பழ­னி­சாமி தரப்­பி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என சென்னை உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இது தொடர்­பாக தாக்­கல் செய்­யப்­பட்ட மனுக்­களை நேற்று விசா­ரித்த உயர் நீதி­மன்­றம், அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­திற்கு வைக்­கப்­பட்ட 'சீல்' அகற்­றப்­பட வேண்­டும் என்­றும் தனது உத்­த­ர­வில் குறிப்­பிட்­டுள்­ளது.

அதி­மு­க­வில் உட்­கட்­சிப் பூசல் மோச­ம­டைந்­துள்­ளது. கடந்த 11ஆம் தேதி மூத்த தலை­வர்­க­ளான எடப்­பாடி பழ­னி­சாமி, ஓ.பன்­னீர்­செல்­வத்­தின் ஆத­ர­வா­ளர்­கள் அதி­முக தலைமை அலு­வ­ல­கத்­தின் முன் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் தாக்­கிக் கொண்­ட­னர். அதன் பின்­னர் அந்த அலு­வ­ல­கத்தை பன்­னீர்­செல்­வம் ஆத­ர­வா­ளர்­கள் தங்­கள் கட்­டுப்­பாட்­டில் கொண்டு வந்­த­னர்.

எனி­னும் பின்­னர் வரு­வாய்த்­துறை­ அந்த அலு­வ­ல­கத்­தைப் பூட்டி சீல் வைத்­த­து.

இதை­ய­டுத்து இரு தரப்­பி­ன­ரும் உயர் நீதி­மன்­றத்தை அணு­கி­னர். இது தொடர்­பாக தாக்­கல் செய்­யப்­பட்ட மனுக்­க­ளின் மீது நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

அதி­முக அலு­வ­லகச் சாவியை எடப்­பாடி பழ­னி­சாமி வசம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்­றும் ஒரு மாத காலத்­திற்கு கட்சி நிர்­வா­கி­கள், தொண்­டர்­கள் ஆகி­யோரை அலு­வ­ல­கத்­திற்­குள் அனு­ம­திக்­கக் கூடாது என்­றும் உயர் நீதி­மன்ற உத்­த­ர­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. மேலும், அதி­முக அலு­வ­ல­கத்­திற்கு காவல்­துறை பாது­காப்பு வழங்­க­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.