சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியமானது தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், கல்லுாரிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வுகளை நடத்துகிறது.
இதுவரை தமிழ் மொழி தெரியாதவர்களும் இத்தேர்வுகளை எழுதி வந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் வசிக்கும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே, தமிழகப் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் வகையில் தேர்வு நடத்தும் முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று மொழி ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளில் தமிழ் கட்டாய தாளை அறிமுகம் செய்ய பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தமிழ்த் தாள் என்பது கட்டாயமாக உள்ளது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியமும் அதே நடை
முறையைப் பின்பற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் முடிவு வரவேற்கத்தகுந்தது என்றும் உடனே செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

