கலவரத்தைத் தூண்ட சதி செய்ததாக மாணவர்கள் கைது

கலவரத்தைத் தூண்ட சதி செய்ததாக மாணவர்கள் கைது

1 mins read
6f16bb39-1252-44ed-878f-5455b99e781e
-

கட­லூர்: சமூக ஊட­கங்­கள் மூலம் கல­வ­ரத்­தைத் தூண்ட முயன்­ற­தாக கட­லூர், திண்­டுக்­கல்­லில் கல்­லூரி மாண­வர்­கள் மூன்று பேரை காவல்­துறை கைது செய்­துள்­ளது.

சின்­ன­சே­லம் அருகே தனி­யார் பள்ளி தொடர்­பாக கல­வ­ரம் வெடித்­ததை அடுத்து தமி­ழ­கம் முழு­வ­தும் காவல்­து­றை­யி­னர் தீவிர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் கட­லூர் தேவ­னாம்­பட்­டி­னம் கடற்­க­ரைப் பகு­தி­யில், காவல்­து­றை­யி­னர் சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். அப்­போது, அப்­ப­கு­தி­யில் ஐந்து பேர் கூடி­நின்று கொண்டு சின்­ன­சே­லம் கல­வ­ரம் குறித்து பேசி­ய­தா­கத் தெரி­கிறது.

மேலும், கட­லூ­ரி­லும் அதே­போல் கல­வ­ரத்­தைத் தூண்ட அவர்­கள் திட்­ட­மிட்­டது காவல்­து­றைக்கு தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து ஐந்து பேரை­யும் பிடிக்க காவ­லர்­கள் முயன்­ற­போது நான்கு பேர் தப்­பி­விட்­ட­னர். பிடி­பட்ட இளை­யர் பெயர் விஜய் என்­ப­தும் அவர் கட­லூ­ரில் உள்ள தனி­யார் கல்­லூ­ரி­யில் இறு­தி­யாண்டு படித்து வரு­வ­தும் விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது. அவர் மூலம் மேலும் இரு­வர் பிடி­பட்­ட­னர்.

சம்­பந்­தப்­பட்ட ஐந்து பேரும் வாட்ஸ் அப் உள்­ளிட்ட சமூக ஊட­கங்­கள் வழி தக­வல் பரப்பி கல­வ­ரத்தை தூண்­டத் திட்­ட­மிட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.