'எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுங்கள்' என காவலர் தண்டோரா

'எடுத்த பொருளை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுங்கள்' என காவலர் தண்டோரா

1 mins read
1b11e865-476f-4dca-8d3f-6d0cbdd0a3a3
தச்­சூர் கிராமத்தில் தண்டோரா போடும் காவலர். தொடர்ந்து, அரு­கில் உள்ள ஊர்களிலும் இதே­போல் தண்­டோரா போடப் பட உள்­ளது. படம்: ஊடகம் -

கள்­ளக்­கு­றிச்சி: 17 வயது பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், நீதி கேட்டு போராட்டம் நடத்தியவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்குள் புகுந்து நாற்­காலி, மேசை, குளிர் சாதன இயந்திரங்கள், கணினி, மின் விசிறி உள்­ளிட்ட பொருள்­களைச் சூறையாடிச் சென்­ற­னர்.

அத்துடன், பள்ளி வளா­கத்­தில் கட்­டப்­பட்­டி­ருந்த ஆடு, மாடு, கோழி உள்­ளிட்­ட­வற்­றை­யும் ஓட்டிச்சென்­ற­னர்.

இவ்வாறு எடுத்துச்சென்ற பொருள்களை எல்லாம் திரும்பக் கொண்டு வந்து ஒப்­ப­டை­யுங்­கள் என்று தண்­டோரா போட்டு கிராம மக்­க­ளி­டம் அறி­வு­றுத்­தப்­பட்­டது.

"கனி­யா­மூர் சக்தி மெட்­ரிக் பள்­ளி­யில் எடுத்த பொருள்­களை எல்லாம் எடுத்த இடத்­திேலயே வைத்­து­வி­டுங்­கள், இல்­லா­வி­டில் காவ­லர்­கள் நட­வ­டிக்கை எடுப்­பார்­கள்," என்று சின்­னசேலம் சுற்­று­ வட்­டா­ரப் பகு­தி­களில் தண்­டோரா மூலம் காவ­லர் ஒருவர் மக்களுக்கு எச்­ச­ரிக்கை விடுத்­தார்.

பள்ளியின் பொருள்களை வைத்திருப்பவர்கள் மீது வழக்கு பாயும் என்றும் அவர்களும் கலவரம் தொடர்பான வழக்கில் விசா ரணைக்கு உள்ளாக்கப்பட்டு தண்ட னைக்கு ஆளாவார்கள் என்றும் தண்டோரா மூலமாக காவலர் எச்சரித்து வருகிறார்.

பள்­ளி­யில் சூறையாடிய பொருள்­களை எடுத்த இடத்­திேலயே வைத்­து­வி­டுங்­கள். இல்­லா­வி­டில்

உங்கள் மீதும் நட­வ­டிக்கை பாயும்.

தண்டோரா போட்டு

எச்சரித்த காவலர்